செய்திகள் :

சிறைச்சாலையில் கோழிப்பண்ணை! கைதிகளுக்கு கோழிக்கறி! அரசுக்கு ரூ.10 கோடி மிச்சம்!!

post image

வேலூர் மத்திய சிறை வளாகத்துக்குள், சிறைக் கைதிகளுக்கு வாரத்தில் இரண்டு நாள்கள் கோழிக்கறி வழங்குவதை எளிதாக்க, கோழிப்பண்ணை தொடங்கப்பட்டு, தற்போது அது பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

வேலூர் மத்திய சிறையில், கைதிளால் நடத்தப்படும் கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளை, பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் சேவை ஒரு சில நாள்களுக்கு முன்பு தொடங்கியிருக்கிறது.

தமிழ்நாடு சிறைத் துறை சார்பில், சிறைக் கைதிகளுக்குத் தேவையான கோழிக்கறியை தங்களே உற்பத்தி செய்து கொள்வதற்காக, தமிழகத்தில் ஒரு சில சிறை வளாகங்களுக்குள் கடந்த டிசம்பர் மாதம் முதல் கோழிப் பண்ணை தொடங்கப்பட்டுள்ளது.

வாரத்தில் இரண்டு நாள்கள் சிறைக் கைதிகளுக்கு கோழிக்கறி வழங்குவதை எளிமையாக்கவும், சிறந்த கோழிக்கறி கிடைக்கும் வகையிலும் அதனை வாங்குவதால் அரசுக்கு ஏற்படும் ரூ.10 கோடி செலவினத்தை மிச்சம் பிடிக்கவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

தற்போது, இந்த திட்டம் சிறப்பாக செயல்பாட்டுக்கு வந்து, கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகள், சிறைக் கைதிகளுக்குப் போக, பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முதல்கட்டமாக முழுக் கோழியும், கறியாகவும் விற்பனைக்கு வந்திருக்கிறது.

சிறை அதிகாரிகள் மேற்பார்வையில், சிறைக் கைதிகளால், இந்த கோழிப்பண்ணையில் இருக்கும் கோழிகள் பராமரிக்கப்படுவதாகவும், 145 கிலோ கோழிக்கறி ஆண்கள் சிறைப் பிரிவுக்கும், 12 கிலோ கோழிக்கறி பெண்கள் சிறைப் பிரிவுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. வாரத்தில் இரண்டு நாள்கள் சிறைக் கைதிகளுக்கு சமைத்த கோழிக்கறி வழங்கப்படுகிறது.

முதலில் சிறைக் கைதிகளுக்காக தொடங்கப்பட்ட இந்த கோழிப்பண்ணையில் தற்போது 40 சதவீதம் கோழிக்கறி சிறைக் கைதிகளுக்கும், 60 சதவீதம் கோழிக்கறி விற்பனைக்கும் கொண்டு செல்லப்படும் வகையில் வளர்ச்சியடைந்திருப்பது சிறைத் துறையினருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

'பிகார் பட்ஜெட்', 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' - ஜெயக்குமார்

மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட், பிகார் மாநில பட்ஜெட்டாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர... மேலும் பார்க்க

பாபா பக்ருதீனை விசாரணைக்கு அழைத்து சென்ற என்ஐஏ

மன்னார்குடியில் பாபா பக்ருதீன் வீட்டை இரண்டாவது முறையாக சோதனை செய்த என்ஐஏ அதிகாரிகள் அவரை விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத்தெருவைச் சேர்ந்தவர் சம்சுதீன் மகன... மேலும் பார்க்க

நாமக்கல்லில் தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்கள் பலி

நாமக்கல்லில் தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்கள் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கொளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்... மேலும் பார்க்க

திமுகவின் ஆட்சி கனவு ஒருபோதும் பலிக்காது: ஓபிஎஸ்

தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்ன... மேலும் பார்க்க

மீனவர்கள் கைது: குழு அமைப்பதாக மத்திய அரசு பல ஆண்டுகளாக கூறி வருகிறது! - கனிமொழி

தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் குழு அமைக்கப்போவதாக மத்திய அரசு பல ஆண்டுகளாக கூறிவருகிறதேதவிர எந்த செயல்பாடும் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாள... மேலும் பார்க்க

காரைக்கால் மீனவர்கள் 9 பேர் விடுதலை, ஒருவருக்கு சிறை!

காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 10 காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த ஜன.8ஆம் தேதி கைது செய்தது. இவர்களில் 9 ப... மேலும் பார்க்க