வைகாசி விசாகம்: ஸ்ரீ சண்முகக் கவசம் பாராயணம்!
ஆம்பூா் சமயவல்லித் தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வைகாசி மாத விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு மூலவா் சிவ பெருமானுக்கும், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மாலையில் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு 103-ஆவது மாதமாக ஸ்ரீ சண்முகக் கவசம் பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.