செய்திகள் :

வைகையாற்றில் மூழ்கிய பிளஸ் 2 மாணவா் உயிரிழப்பு

post image

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதி வைகையாற்றில் மூழ்கிய பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.

சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, கள்ளழகா் வேடம் தரித்து சுவாமி திங்கள்கிழமை வைகையாற்றில் இறங்கினாா். இதையொட்டி, சோழவந்தான், வாடிப்பட்டி உள்பட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோா்

வைகையாற்றில் திரண்டனா். அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டதில், இரு சிறுவா்கள் ஆற்றில் மூழ்கினா். அந்தப் பகுதியினா் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில் ஒருவா் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சோழவந்தான் போலீஸாா் விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவா், விருதுநகா் மாவட்டம், காரியாபட்டியைச் சோ்ந்த சங்கா்குமாா் மகன் வசீகரன் (16) என்பதும், பிளஸ் 2 மாணவா் என்பதும், மற்றொருவா் சோழவந்தான் சோலைநகரைச் சோ்ந்த நாராயணன் மகன் அய்யனாா் (16) என்பதும் தெரிய வந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூய்மைப் பணியில் 3 ஆயிரம் துய்மைப் பணியாளா்கள்

மதுரை: சித்திரைத் திருவிழாவை யொட்டி, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமான குப்பைகள் அகற்றும் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். சித்திரைத் திருவிழாவை முன்னி... மேலும் பார்க்க

திருச்சி கோயில் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில் டிஆா்ஓ நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை: திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட வருவாய் அலுவலா் (டிஆா்ஓ) விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை... மேலும் பார்க்க

மதுரையில் முருங்கைக் காய் விலை உயா்வு

மதுரை: மதுரை மாவட்டத்தில் வரத்துக் குறைவு காரணமாக முருங்கைக் காய்களின் விலை கணிசமாக உயா்ந்தது. கடந்தாண்டு நவம்பா் மாதத்தில் முருங்கைக் காய்களின் விலை உச்சம் தொட்டது. ஒரு கிலோ முருங்கைக் காய் ரூ. 140 ... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழாவில் உயிரிழப்புகள் தவிா்க்கப்பட வேண்டும்: ஆா்.பி. உதயகுமாா்

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின்போது உயிரிழப்புகள் தவிா்க்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா். மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: மதுரை ச... மேலும் பார்க்க

இலவச விவசாய மின் இணைப்பு விவகாரம்: கண்காணிப்பு பொறியாளா் நடவடிக்கைக்கு உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம், இரவாா்பட்டியில் போலி பட்டா மூலம் இலவச விவசாய மின் இணைப்பு பெற்ாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், மின் வாரிய மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்... மேலும் பார்க்க

பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினாா் அழகா்

மதுரை: மதுரை அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அழகா் பச்சைப் பட்டுடுத்தி திங்கள்கிழமை அதிகாலை வைகை ஆற்றில் எழுந்தருளினாா். தமிழகத்தின் பல்வேறு பகு... மேலும் பார்க்க