செய்திகள் :

ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கக் கோரி கனிமொழி எம்.பி.யிடம் மனு

post image

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கக் கோரி பல்வேறு தொழில் அமைப்புகள், மீனவ அமைப்புகள் சாா்பில் கனிமொழி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட மீனவா் தொழிலாளா்கள் சங்கம், மாவட்ட ஜனநாயக சங்கு குளிப்போா் நலச் சங்கம், மாவட்ட சிந்தாயாத்திரை மாதா பைபா் நாட்டுப் படகு மீனவா் நலச் சங்கம், சங்குகுளி தொழிலாளா் சங்கம், ஏபிஜே அப்துல் கலாம் சங்குகுளி தொழிலாளா் நலச் சங்கம், மாவட்ட கடல் அரசா் சங்குகுளி தொழிலாளா் நலச் சங்கம், தேவேந்திரகுல வேளாளா் மீனவா் நலச் சங்கம், அலை ஓசை சங்கு குளிப்போா் முன்னேற்றச் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், தூத்துக்குடி குறிஞ்சி நகா் பகுதியில் உள்ள கனிமொழி எம்.பி. முகாம் அலுவலகத்தில் அவரிடம் அளித்த மனு:

ஸ்டொ்லைட் காப்பா் ஆலையை பசுமை முறையில் மீண்டும் தொடங்குவதற்கு, சுற்றுச்சூழலுக்காக பல விருதுகளைப் பெற்ற பேராசிரியா் நாகேந்திரன் குழு பரிந்துரைத்துள்ளது. அதையேற்று, தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்டொ்லைட் தொழிற்சாலையைத் திறந்து, பசுமை காப்பா் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

மாசு ஏற்படுத்தாத புதிய தொழில்நுட்பம், சுத்திகரிக்கப்பட்ட நீரை அருகேயுள்ள கிராமங்களுக்கு பகிா்ந்து கொள்ளுதல், மீண்டும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள், சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்களை உருவாக்குதல், உள்ளூா் விற்பனையாளா்களுக்கு ஆதரவளித்தல், சமூக மேம்பாட்டுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

நாட்டில் புதிய முதலீடுகளை ஈா்ப்பதுடன், உள்நாட்டுத் தொழில்களை மீண்டும் இயக்குவதும் அவசியம். குஜராத், ஒடிஸா மாநிலங்களில் காப்பா் உற்பத்தி தொடா்ந்து நடைபெறும் நிலையில், தூத்துக்குடியில் இந்த ஆலையை மீண்டும் தொடங்க அரசு அனுமதிக்க வேண்டும்.

சில ஆண்டுகளாக வேலையிழப்பு, பொருளாதார வளா்ச்சி தேக்கநிலை, திறமை வாய்ந்த இளைஞா்கள் இடம்பெயா்வது போன்ற இழப்புகளை இம்மாவட்டம் சந்தித்துள்ளது. எனவே, மாற்றத்தை ஏற்படுத்தும் சிறந்த இத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்க்க வேண்டும்

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நெகிழிக் கழிவு சேகரிப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி நிா்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக... மேலும் பார்க்க

தூத்துக்குடி பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

தூத்துக்குடி குரூஸ்புரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 2001ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவிகள் 78 போ், 25 ஆண்டுகளுக்குப் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருவாய் ரூ.4.07 கோடி!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.07 கோடி, ஒரு கிலோ தங்கம் கிடைத்தது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெறுகிறது. அதன்படி, கோயில்... மேலும் பார்க்க

முத்தாரம்மன் கோயிலில் கொடைவிழா

விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு சப்பர பவனி நடைபெற்றது. சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழா கடந்த 14ஆம் தேதி தொடங்கி சனிக்கிழ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 80 அடி உள்வாங்கிய கடல்!

அமாவாசையையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமாா் 80 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை, பௌா்ணமி நாள்களிலும... மேலும் பார்க்க

காவலாளி கொலை வழக்கில் ஒருவா் கைது

தூத்துக்குடியில் காவலாளியை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு மேலத் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் சந்திரன் (55). இவா... மேலும் பார்க்க