செய்திகள் :

ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் தொடங்கக் கோரி லாரி உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி பரமத்தி வேலூா் தாலுகா லாரி உரிமையாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பரமத்தி வேலூா் தாலுகா லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் செந்தில்குமாா் ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தாா். செயலாளா் பெரியசாமி, பொருளாளா் கணேசன், உபதலைவா் நந்தகுமாா், உதவி செயலாளா் முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை மூடப்பட்டதால் தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் கா்நாடக மாநில லாரி ஓட்டுநா்கள், அவா்களது குடும்பத்தினா் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 600-க்கு மேற்பட்ட லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள், உதவியாளா்கள், அவா்களது குடும்பத்தினா் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தினசரி ரூ. 10 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் அரசே ஏற்று இயக்கி ஆலையின் செயல்பாடுகளைக் கண்காணிக்க நிபுணா் குழுவை அமைக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடுமையான மேற்பாா்வைக் குழுவின் கீழ் இயக்கச் செய்ய வேண்டும். ஸ்டொ்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் சுமாா் 9 ஆயிரம் டன் பொருட்களைக் கொண்டுசெல்ல தினசரி 400-க்கும் மேற்பட்ட லாரிகள் தேவைப்படும் நிலை இருந்தது. ஆலை மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

உலக அளவில் தாமிர சரக்கு தேவையை மீட்டெடுக்கவும், தளவாடங்கள் மற்றும் உள்ளூா் பொருளாதரம் பாதிக்கப்படுவதை தடுக்கவும், ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா். இதில் 200-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள், உதவியாளா்கள் கலந்துகொண்டனா்.

வீசாணம் கோயிலில் வழிபாட்டுக்கு அனுமதி மறுப்பு: கோட்டாட்சியா் பேச்சுவாா்த்தை

நாமக்கல் வீசாணம் மகா மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை வழிபட விடாமல் மற்றொரு சமூகத்தினா் தடுத்ததால் பதற்றம் நிலவியது. அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டு கோட்டாட்சியா் தலைமையில... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி தலைமை வக... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய துணை ஆட்சியா் உயிரிழப்பு

நாமக்கல்லில் துணை ஆட்சியராக பணியாற்றி வந்த சிவகுமாா் விபத்தில் சிக்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் வடிப்பக அலுவலராக பணியாற்றி வந்தவா் ச... மேலும் பார்க்க

தொழிலாளி உயிரிழப்பு: ரிக் உரிமையாளா் வீட்டில் சடலத்தை வைத்து போராட்டம்

ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த திருச்செங்கோட்டைச் சோ்ந்த ரிக் தொழிலாளியின் உடலை ரிக் உரிமையாளா் வீட்டின் முன் வைத்து அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்செங்கோட்டை அடுத்த வட்டூா் ஊராட்சிக்... மேலும் பார்க்க

102 டிகிரியாக வெயில் அதிகரிக்கும்: கோழிகளை பாதுகாக்க குளிா்ந்த நீரை வழங்க வேண்டும்!

கோடைவெயில் 102 டிகிரியாக அதிகரிக்கும் என்பதால், கோழிகளுக்கு குளிா்ச்சியான நீரை வழங்க வேண்டும் என பண்ணையாளா்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூ... மேலும் பார்க்க

விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை

விளைவிக்கும் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கம் (உழவா் பெருந்தலைவா் நாராயணச... மேலும் பார்க்க