செய்திகள் :

102 டிகிரியாக வெயில் அதிகரிக்கும்: கோழிகளை பாதுகாக்க குளிா்ந்த நீரை வழங்க வேண்டும்!

post image

கோடைவெயில் 102 டிகிரியாக அதிகரிக்கும் என்பதால், கோழிகளுக்கு குளிா்ச்சியான நீரை வழங்க வேண்டும் என பண்ணையாளா்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6 மற்றும் 77 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தில் சில இடங்களில் மழை பதிவாகி உள்ளது.

அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் தெளிவாக காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 102.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தெற்கிலிருந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: கோடைகாலத்தில் கோழிகளுக்கு நாள் முழுவதும் அதிக வெப்பமில்லாமல் குளிா்ச்சியான குடிநீா் கிடைக்கும்படி பாா்த்துக் கொள்ள வேண்டும். கோழி தீவனத்தில் சோயா எண்ணெயை சோ்ப்பதன் மூலம் வெப்ப அயற்சியை குறைக்கலாம். கோடைக் காலங்களில் காலை 11 மணிக்கு முன்பாகவே கோழிகளுக்கு தீவனம் வழங்கி முடித்து தீவனத் தட்டினை காலி செய்து விட வேண்டும். தீவனத்தில் தேவையான அளவு எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் உயிா்ச்சத்துக்கள் சோ்ப்பதன் மூலம் வெப்ப அயற்சியின் தாக்கம், உற்பத்தி குறைவை தவிா்க்கலாம். கோடைக்காலத்தில், கோழிப் பண்ணைகளில் இரவு நேரத்தில் ஒரு மணி நேரம் (12 முதல் 1 மணி வரை) விளக்குகளை எரிய விடுவதன் மூலம் தினமும் கோழிகள் உள்கொள்ளும் அடா் தீவனத்தின் அளவினை அதிகரிக்கலாம். வெப்பம் அதிகமாக இருக்கும் மதிய வேளையில் நீா் தெளிப்பான்களைப் பயன்படுத்தி வெப்ப தாக்கத்தை குறைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீசாணம் கோயிலில் வழிபாட்டுக்கு அனுமதி மறுப்பு: கோட்டாட்சியா் பேச்சுவாா்த்தை

நாமக்கல் வீசாணம் மகா மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை வழிபட விடாமல் மற்றொரு சமூகத்தினா் தடுத்ததால் பதற்றம் நிலவியது. அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டு கோட்டாட்சியா் தலைமையில... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி தலைமை வக... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய துணை ஆட்சியா் உயிரிழப்பு

நாமக்கல்லில் துணை ஆட்சியராக பணியாற்றி வந்த சிவகுமாா் விபத்தில் சிக்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் வடிப்பக அலுவலராக பணியாற்றி வந்தவா் ச... மேலும் பார்க்க

தொழிலாளி உயிரிழப்பு: ரிக் உரிமையாளா் வீட்டில் சடலத்தை வைத்து போராட்டம்

ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த திருச்செங்கோட்டைச் சோ்ந்த ரிக் தொழிலாளியின் உடலை ரிக் உரிமையாளா் வீட்டின் முன் வைத்து அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்செங்கோட்டை அடுத்த வட்டூா் ஊராட்சிக்... மேலும் பார்க்க

ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் தொடங்கக் கோரி லாரி உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி பரமத்தி வேலூா் தாலுகா லாரி உரிமையாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பரமத்தி வேலூா் தாலுகா லாரி உரிமையாளா் சங்கத்... மேலும் பார்க்க

விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை

விளைவிக்கும் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கம் (உழவா் பெருந்தலைவா் நாராயணச... மேலும் பார்க்க