செய்திகள் :

பெஹல்காம் தாக்குதல்: உச்ச நீதிமன்றம் மௌன அஞ்சலி

post image

நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய பெஹல்காம் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, இந்தியாவின் கிரீடமாகவும் மற்றும் இயற்கை அழகும் கொண்ட நகரில் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் புனிதத்தன்மைக்குமான அவமரியாதை. இதனை நீதிமன்றம் கடுமையாகக் கண்டிக்கிறது.

மனசாட்சியற்ற வன்முறையின் இந்த கொடூரமான செயல், அனைவரின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. மேலும், பயங்கரவாதத்தின் மிருகத்தனத்தையும் மனிதாபிமானமற்ற தன்மையையும் காட்டுகிறது என்று கூறியது.

தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். அவர்களுடன் தேசம் என்றும் உடனிருக்கும் என்று இரங்கலும் தெரிவித்தது.

இதனையடுத்து, இந்த சம்பவத்தில் உயரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

இதையும் படிக்க:ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை; ரத்து செய்த அமெரிக்கா?

பெஹல்காம் தாக்குதல் எதிரொலி: ஞானவாபி மசூதியில் பாதுகாப்பு அதிகரிப்பு!

பெஹல்காம் தாக்குதல் எதிரொலியாக உத்தரப் பிரதேசத்திலுள்ள ஞானவாபி மசூதிக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெஹல்காம் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு - காஷ்மீரிலும், மகாராஷ்டிரத்திலும் பல்வேறு இந்த... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: ஆப்கன் அரசு கண்டனம்!

பெஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆப்கன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பெஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியான நிலையில், இந்தத் தா... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்., அழைப்பு

பெஹல்காம் தாக்குதல் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, தில்லி தலைமை அலுவலகத்தில் நாளை (ஏப். 24) காலை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் செயற்குழு உற... மேலும் பார்க்க

கூடுதல் கண்காணிப்புக்கு உள்ளாகும் காஷ்மீர் மக்களை நினைத்தால்... ஆண்ட்ரியா வேதனை!

பெஹல்காம் தாக்குதல் மற்றும் காஷ்மீர் மக்கள் குறித்து நடிகை ஆண்ட்ரியா வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பெஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கு பக... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்!

ஜம்மு - காஷ்மீரில் நாளை (ஏப். 24) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் ஒமர் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார். தலைநகரான ஸ்ரீநகரில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பெஹல்காம் தீவிர... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இந்திய தூதரகத்தை மூடத் திட்டம்? மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது. ஜம்மு-கா... மேலும் பார்க்க