செய்திகள் :

பாகிஸ்தானில் இந்திய தூதரகத்தை மூடத் திட்டம்? மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

post image

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் நேற்று(செவ்வாய்க்கிழமை) நடந்த கொடூர பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளாகச் சென்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 28 பேர் பலியாகியுளளனர். இதில் 2 பேர் வெளிநாட்டவர்கள்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார்.

பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை மூடவும் அதேபோல பாகிஸ்தானுடனான வர்த்தக உறவை முறித்துக்கொள்ளவும் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை திருப்பி அனுப்பவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெஹல்காம் தாக்குதலையடுத்து இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதனிடையே தெற்கு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க |பெஹல்காம்: இஸ்லாமிய வாசகங்களை கூறக் கட்டாயப்படுத்திய பயங்கரவாதிகள்!

பெஹல்காம் தாக்குதல் எதிரொலி: ஞானவாபி மசூதியில் பாதுகாப்பு அதிகரிப்பு!

பெஹல்காம் தாக்குதல் எதிரொலியாக உத்தரப் பிரதேசத்திலுள்ள ஞானவாபி மசூதிக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெஹல்காம் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு - காஷ்மீரிலும், மகாராஷ்டிரத்திலும் பல்வேறு இந்த... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: ஆப்கன் அரசு கண்டனம்!

பெஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆப்கன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பெஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியான நிலையில், இந்தத் தா... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்., அழைப்பு

பெஹல்காம் தாக்குதல் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, தில்லி தலைமை அலுவலகத்தில் நாளை (ஏப். 24) காலை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் செயற்குழு உற... மேலும் பார்க்க

கூடுதல் கண்காணிப்புக்கு உள்ளாகும் காஷ்மீர் மக்களை நினைத்தால்... ஆண்ட்ரியா வேதனை!

பெஹல்காம் தாக்குதல் மற்றும் காஷ்மீர் மக்கள் குறித்து நடிகை ஆண்ட்ரியா வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பெஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கு பக... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்!

ஜம்மு - காஷ்மீரில் நாளை (ஏப். 24) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் ஒமர் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார். தலைநகரான ஸ்ரீநகரில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பெஹல்காம் தீவிர... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்!

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்திய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாத குழு... மேலும் பார்க்க