செய்திகள் :

ஸ்மார்ட்போன்களில் நேரம் செலவிடும் இந்தியர்களால் வருவாய் அதிகரிப்பு!

post image

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை வளர்ச்சியடைவதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் எர்ன்ஸ் & யங்கின் ஆய்வில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை, 2024 ஆம் ஆண்டில் 2.5 டிரில்லியனாக வளர்ச்சியடைந்தது. தொலைக்காட்சியைவிட டிஜிட்டல் மீடியா அதிக வளர்ச்சி பெற்றதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 3.3 சதவிகித வளர்ச்சியாக இருந்தாலும், விரிவாக்கத்துடன் ஒப்பிடுகையில் 8.3 சதவிகித வேகம் குறைவுதான்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் பங்களிப்பு 0.73 சதவிகிதமாக உள்ளது.

2024 ஆம் ஆண்டில், இந்தியர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் 1.1 டிரில்லியன் மணிநேரங்களை செலவிட்டனர்; இந்த 1.1 டிரில்லியன் மணிநேரங்களில் 70 சதவிகிதம், சமூக ஊடகங்கள், கேமிங், விடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் என சராசரியாக ஒரு நாளைக்கு 5 மணி நேரம் செலவிட்டுள்ளனர். இதன் காரணமாக, டிஜிட்டல் விளம்பரம் 17 சதவிகிதம் அதிகரித்து, ரூ. 70,000 கோடியை எட்டியது; இது, மொத்த விளம்பர வருவாயில் 55 சதவிகிதம்.

2024-ல் ஒட்டுமொத்தமாக மந்த நிலை இருந்தாலும், விளம்பர வருவாய் 8.1 சதவிகிதம் அதிகரித்தது. மேலும், நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்கும் துறைகளும் 15 சதவிகித வளர்ச்சியடைந்ததுடன், முதல்முறையாக ரூ. 10,000 கோடியைத் தாண்டியது.

2024-ல் தேர்தல் மற்றும் அரசு தொடர்பான நிகழ்வுகள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களின் திருமணங்கள், சர்வதேசக் கலைஞர்களின் பிரமாண்ட கச்சேரிகளால்தான் இந்த வருவாய் சாத்தியமானது என்கின்றனர்.

விளம்பர வருவாய் அதிகரிப்பு, நிகழ்வு வளர்ச்சி, சந்தா சரிவுகள் இருந்தாலும், 2025 ஆம் ஆண்டிலும் இந்த வளர்ச்சி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025-ல் 7.2 சதவிகித விரிவாக்கத்துடன், மொத்த தொழில் அளவை 2.68 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வில் கூறுகிறது.

இதையும் படிக்க:ரஷிய அதிபர் புதின் கார் வெடித்து சிதறியது!

சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை

சென்னை – தூத்துக்குடி இடையில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை – தூத்துக்குடி இடையிலான பயணிகள் போக்குவரத்து ரயிலில் நெ... மேலும் பார்க்க

வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். வக்ஃப் விவகாரங்கள... மேலும் பார்க்க

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க

ராம நவமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

மும்பை: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதில் முதன்மையானதாக அறியப்படும் இஸ்கான் பிவாண்டி கோயிலில் வரவிருக்கும் ராம நவமி விழாவைக் கொண்டாடச் சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது .இந்தாண்டு ஏப்ரல் 6-ம் தேதி ராம ... மேலும் பார்க்க

பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!

பாஜக தேசிய தலைவர் தேர்வு தொடர்பாக மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இடையே காரசார வாதம் நிகழ்ந்தது.மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா ... மேலும் பார்க்க