செய்திகள் :

ஸ்மார்போன் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை!

post image

நடப்பு நிதியாண்டின் கடந்த 11 மாதங்களில் நாட்டின் ஸ்மார்போன் ஏற்றுமதி ரூ. 21.29 லட்சம் கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மின்னணு மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகளாவிய ஸ்மார்ட்போன் மையமாக இந்தியா மாறியுள்ளது. ​​நாட்டில் விற்பனையாகும் 99.2% ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை.

2025 நிதியாண்டின் 11 மாதங்களில், இந்தியாவின் மொபைல் ஏற்றுமதி ரூ. 21.29 லட்சம் கோடியாக உயர்ந்து, உலகளவில் தயாரிப்புத் துறையில் இந்தியா மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

2014ஆம் ஆண்டு நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி 0.2 பில்லியன் டாலர்களாகவே இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், 21 பில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டியுள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலேயே விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களின் விகிதம் 2014 - 2015-ல் 26% ஆக இருந்தது. ஆனால், 2024 - 2025ல் 99.2% ஆக அதிகரித்துள்ளது.

இதன்மூலம் உலகின் 2வது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-ல் ஸ்மார்ட்போன் தயாரிப்புக்காக இரு தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன. தற்போது 300க்கும் அதிகமான தொழிற்சாலைகளில் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதையும் படிக்க | நாட்டின் ஏற்றுமதியில் மீண்டும் சரிவு! ரூ. 12 ஆயிரம் கோடி இழப்பு!

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம்: மாநிலங்களவையில் வைகோ!

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம் என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முழக்கமிட்டார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட்டத்தில் மணி... மேலும் பார்க்க

கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? - எதிர்கட்சியினர் கேள்வி

மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் மோடி பேசவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா சிவராத... மேலும் பார்க்க

முடி உதிர்வைத் தடுக்க சிகிச்சை: 67 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பஞ்சாப் மாநிலத்தில் முடி உதிர்வைத் தடுக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவர்ம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பின் சங்ரூரில் உள்ள ஒரு கோவிலில் முடி உத... மேலும் பார்க்க

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம்! ராகுல் சூளுரை

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும் என்றும் அதனை நாங்கள் நடத்திக் காட்டுவோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடு... மேலும் பார்க்க

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு!

ஹைதராபாத்தில் மொபைல் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் சமூக வலைதளப் ... மேலும் பார்க்க

தெலங்கானா: பிசி இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்!

தெலங்கானா சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 42 சதவிகிதமாக அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதா திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்... மேலும் பார்க்க