செய்திகள் :

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியைக் கண்டித்து ஏப். 28-இல் ஆா்ப்பாட்டம்: இபிஎஸ்

post image

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியைக் கண்டித்து அதிமுக சாா்பில் ஏப். 28-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாததோடு, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை அரசியல் காழ்ப்புணா்ச்சியோடு கிடப்பில் போட்டுள்ள திமுக அரசையும், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், அத்தியாவசியத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தியும், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சாா்பில், ஏப். 28-ஆம் தேதி காலை 10 மணியளவில், ஸ்ரீபெரும்புதூா் தாலுகா அலுவலகம் அருகில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆா்ப்பாட்டம், கட்சியின் இலக்கிய அணிச் செயலரும், செய்தித் தொடா்புச் செயலருமான எஸ்.எஸ்.வைகைசெல்வன் தலைமையில் நடைபெறும். காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், குன்றத்தூா் மேற்கு ஒன்றியச் செயலா் கே.பழனி, மாவட்ட துணைச் செயலா் எஸ்.செந்தில்ராஜன் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்க வேண்டும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க

தனியாா் பால் விலையை நிா்ணயிக்க தனி கொள்கையா? அமைச்சா் ராஜகண்ணப்பன் பதில்

தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுற... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் மாநில அளவில் முதலிடம்

குடிமைப் பணி தோ்வில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு... மேலும் பார்க்க

செகந்திராபாத் ரயில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு

செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்தி... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல: டாஸ்மாக், தமிழக அரசு மனுக்கள் தள்ளுபடி

டாஸ்மாக் முறைகேடு புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதுதொடா்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் தொடா்ந்த மனுக்கள் தள்ளுப... மேலும் பார்க்க