செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர்: டாஸ்மாக் சென்றவரை தாக்கி பணம், நகை கொள்ளை; நண்பர் ஏவிய கும்பல் வெறிச்செயல்

post image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி இந்திரா நகரில் வசிப்பவர் முனியசாமி (41). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

முனியசாமி, தன் நண்பரான கனகராஜ் என்பவருடன் வீட்டில் இருந்து டாஸ்மாக் கிளம்பியுள்ளார்.

சிவகாசி ரிசர்வ்லைன் ராஜா காலனியை சேர்ந்தவர் கனகராஜ்.

இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி மெயின் ரோட்டில், பூவநாதபுரம் விலக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று கொண்டிருந்தனர்.

கொள்ளையர்கள்

அப்பொழுது அங்கு வந்த ஒரு கும்பல் முனியசாமியை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்து தங்கச் சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்தது.

அத்துடன் அவரது வீட்டுச் சாவியைப் பறித்துக்கொண்டு வீட்டுக்கும் சென்றனர். அங்கிருந்த பீரோவில் பணம், நகை மற்றும் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதன் மொத்த மதிப்பு ரூபாய் 1 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் ஆகும். இது குறித்து முனியசாமி அளித்த புகாரின் அடிப்படையில் மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டும் பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டது.

ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்
ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்

அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கனகராஜ் தலைமையிலான சிவகாசி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த ரஞ்சித், சமத்துவபுரம் சரவணன் என்ற சுடலை, முத்துராமலிங்கம் காலனி தவராஜா என்பது தெரிய வந்தது.

பின்னர் கனகராஜ் உள்பட சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் போலீசார் கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் பொருள்களை கைப்பற்றினர். பின் தீவிர விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தீபாவளி வசூல்: `கட்டுக் கட்டாக பணம், பட்டுப்புடவைகள்' -வட்டார போக்குவரத்து அலுவலக ரெய்டில் அதிர்ச்சி

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களிலும் தீபாவளி விழா லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழகம் முழுவ... மேலும் பார்க்க

டிஜிட்டல் கைது; ரூ.58 கோடியை இழந்த 72 வயது தொழிலதிபர் - மோசடி கும்பல் சிக்கியது எப்படி?

மும்பையில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த இணைய குற்றங்களால் அதிக அளவில் முதியவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். புதிதாக 72 வயது முதியவ... மேலும் பார்க்க

கோத்தகிரி: ஒருபக்கம் சுருக்கு கம்பி, மறுபக்கம் மின்கம்பி - துடிதுடித்து இறந்த 2 கரடிகள்

வனத்துக்கும் வன உயிரினங்களுக்கும் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நீலகிரியில் வன விலங்குகள் இயற்கைக்கு மாறாக உயிரிழக்கும் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. துப்பாக்கி வேட்டைக்கு அடுத்தபடியாக சுர... மேலும் பார்க்க

தீபாவளி வசூல்: பட்டாசு ஆலை, கடைகளில் லட்சக்கணக்கில் வசூல் - விருதுநகரில் பிடிபட்ட தீயணைப்பு வீரர்கள்

விருதுநகரில் தீபாவளிக்காக பணம் வசூலித்த 3 தீயணைப்பு வீரர்களை பணியிட மாற்றம் செய்து தீயணைப்புத்துறை தென் மண்டல துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்த வினோத்... மேலும் பார்க்க

போலீஸால் பாதுகாக்கப்படும் 'போலி' வேட்பாளர்?- கைதுக்காக காத்திருக்கும் 200 காவலர்கள்! - என்ன சிக்கல்?

பஞ்சாப் மாநிலத்தின் ராஜ்யசபா பதவிக்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) வாக்களிக்கும் மறைமுக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர் ஜனதா கட்சியின் தலைவர் நவ்நீத் சத... மேலும் பார்க்க

போக்சோ வழக்கு: அகில இந்துசபா தலைவர் ஸ்ரீ கைது; விவரம் என்ன?

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அகில இந்து மகாசாபாவின் தலைவர் ஶ்ரீ என்கிற ஶ்ரீ கந்தன் போக்சோ சட்டம் மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிர... மேலும் பார்க்க