செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயம் வனப்பகுதியில் 3 வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயத்தில் காட்டுத்தீ 3 வது நாளாக எரிந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நில அணில்கள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் ஆகிய இரண்டு சரணாலயங்கள் இயங்கி வருகின்றன. இந்த அடர்ந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மிளா, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இப்பகுதியில் பல அறிய வகை மூலிகை செடிகளும் அமைந்துள்ளது. இந்நிலையில் செண்பகத்தோப்பு, அழகர்கோவில் அருகே மருதடி பீட், கன்னிமார் ஊத்து பீட் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி தீ மளமளவென எரிந்து வருகிறது.

காட்டுத்தீ

மலைப்பகுதியில் பற்றிய தீ சரணாலய பகுதி முழுவதும் எரிந்து வருகிறது. திடீரென பற்றி எரிந்த காட்டுத்தீயால் பல அரிய வகை மூலிகைகள் பாதிப்படைவதற்கும் மற்றும் சிறிய வகை வனவிலங்குகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதன் காரணமாக மலைப்பகுதியில் தீயானது வேகமாகப் பரவி வருகிறது. 3 வது நாளாக பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் இரண்டு குழுக்களாக பிரிந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இன்று தீயானது அணைக்கப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பை: கடல் சுரங்கப்பாதையில் தீப்பிடித்து எரிந்த கார்; புகை மண்டலத்தால் ஸ்தம்பித்த போக்குவரத்து

மும்பையின் மேற்கு பகுதியை தென்பகுதியோடு இணைக்கும் விதமாக கடற்கரையொட்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் போக்குவரத்திற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் கடலி... மேலும் பார்க்க

சென்னை: பிரபல மாலில் லிஃப்ட் விபத்து; உடல் நசுங்கி ஊழியர் பலி - அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூவின் லிஃப்டில் சிக்கி ஊழியர் ஒருவர் இன்று உயிரிழந்திருக்கிறார். ஊழியரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு எழ... மேலும் பார்க்க

நெல்லை: ஒரே நாளில் 14 பேரை கடித்த வளர்ப்பு நாய்; உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் சமீப காலமாக நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகள் குறைந்துள்ளது. இதனால், நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகள், தெருக்களில் நாய்கள் க... மேலும் பார்க்க

ரயில் மோதி இறந்த பெண்; வேடிக்கை பார்க்கச் சென்ற நபரும் உயிரிழந்த பரிதாபம் - குளித்தலை சோகம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் அன்னக்கிளி (வயது 52). இவர், கரூர் மாவட்டம், சிந்தலவாடியில் உள்ள தன் தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், லாலாபேட்டை ரயில் நிலையம் அருகே ரயில்வே... மேலும் பார்க்க

பாம்பன் பாலத்தில் சென்ற ரயில்; கடலில் தவறி விழுந்த வாலிபர்... காயம் இன்றி உயிர் தப்பிய அதிசயம்!

மதுரை பரவை பகுதியை சேர்ந்த இளைஞர் வரதராஜன். வங்கி ஊழியரான இவர், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய நேற்று காலை மதுரையில் இருந்து ராமேசுவரம் வந்துள்ளார். மதுரை பாசஞ்சர் ரயிலில் ராமேசுவரம் வ... மேலும் பார்க்க

4-வது மாடியிலிருந்து விழுந்து பிழைத்த குழந்தை; டிராபிக்கில் 4 மணி நேரம் சிக்கியதால் உயிரிழப்பு

புல் தடுக்கி விழுந்து உயிரிழந்தவர்களும் உண்டு. அதே சமயம் மிகப்பெரிய விபத்தில் சிக்கியவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவமும் நடந்துள்ளது.மும்பையில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை அதி... மேலும் பார்க்க