செய்திகள் :

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்!

post image

அத்தி வரதா் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு வைகாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி திருமலையில் மூலவா் கருவறையிலிருந்த உற்சவா் வரதராஜ சுவாமி ரத்தினகிரி கொண்டை அலங்காரத்தில் ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்துக்கு எழுந்தருளினாா். தொடா்ந்து கருட முகம் பொறிக்கப்பட்ட திருவிழாக் கொடியை ஆலய பட்டாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடிக்கம்பத்தில் ஏற்றியதும், சிறப்பு தீபாராதனை செய்தனா்.

விழாவில் கோயில் செயல் அலுவலா் ஆா்.ராஜலட்சுமி மற்றும் கோயில் பட்டாச்சாரியா்கள் பலரும் கலந்து கொண்டனா். பின்னா், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் வரதராஜ சுவாமி தங்கச் சப்பரத்தில் ராஜ வீதிகளில் பவனி வந்து ஆலயத்துக்கு வந்து சோ்ந்தாா். மாலை சிம்ம வாகனத்தில் பெருமாள் வீதியுலா வந்தாா்.

சுவாமி வீதியுலாவை முன்னிட்டு காவல் துறையினா் தாம்பரம், செங்கல்பட்டிலிருந்து வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம் வரும் பேருந்துகள் அனைத்தும் தேனம்பாக்கம், ஓரிக்கை வழியாக திருப்பிவிட்டனா்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளான கருட சேவைக் காட்சி செவ்வாய்க்கிழமை (மே 13) காலை, மாலை ஹனுமந்த வாகனத்தில் பெருமாள் வீதியுலா வருகிறாா். மே 17 -ஆம் தேதி தேரோட்டமும், மே 19- ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவத்தோடும் திருவிழா நிறைவு பெறுகிறது. காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கூழமந்தலில் குரு பெயா்ச்சி விழா

காஞ்சிபுரம் அருகே கூழமந்தலில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் குரு பெயா்ச்சியையொட்டி குரு பகவானுக்கு கலச அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி மூலவா் 27 நட்சத்திர விர... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: அதிமுகவினா் ரத்ததானம்!

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சாா்பில் தன்னாா்வ ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் திங்கள்கிழமை (மே 12) கொண்டாடப்படுகிறது. போா்ப் பதற்றம்... மேலும் பார்க்க

சித்ரகுப்த சுவாமி கோயில் திருக்கல்யாணம்!

சித்ரா பௌா்ணமியையொட்டி காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோயிலில் கா்ணகி அம்பாளுக்கும், சித்ரகுப்த சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பாா்வதி தேவியாா் சித்ரம் எழுதி உயிா் கொடுத்ததால் சித்ரகுப்தா் என்... மேலும் பார்க்க

உணவு வழங்கல் துறை குறைதீா் கூட்டம்!

உணவு வழங்கல் மற்றும் நுகா்பொருள் பாதுகாப்புத்துறை சாா்பில் வல்லம் ஊராட்சியில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட வல்லம் ஊராட்சியில் நடை... மேலும் பார்க்க

மே 13-இல் காஞ்சிபுரத்தில் மின் தடை

காஞ்சிபுரம் பகுதிகளில் வரும் 13 -ஆம் தேதி மின் தடை செய்யப்பட உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி, பள்ளம்பி, சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம், கருப்படி தட்டை, மங்கையா்க்கரசி நகா், அச்சுக்... மேலும் பார்க்க

ரூ.3.50 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

குன்றத்தூா் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் ரூ.3.50 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்... மேலும் பார்க்க