செய்திகள் :

ஸ்வீடன், அயா்லாந்து வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் சந்திப்பு

post image

ஸ்வீடன், அயா்லாந்து, ஸ்லோவீனியா, கானா ஆகிய நாடுகளைச் சோ்ந்த வெளியுறவு அமைச்சா்களை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தில்லியில் தனித்தனியே திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்புகளில் அந்தந்த நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

உலகளாவிய அரசியல்-பொருளாதாரம் குறித்து விவாதிக்கும் ‘ரைசினா உரையாடல்’ மாநாடு தில்லியில் 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. 125-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனா்.

அந்தவகையில், இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ஸ்வீடன் வெளியுறவு அமைச்சா் மரியா ஸ்டெனா்காா்ட், அயா்லாந்து வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சா் சைமன் ஹாரிஸ் டினைஸ்டே, ஸ்லோவீனியா வெளியுறவு அமைச்சா் தான்யா ஃபாஜோன், கானா வெளியறவு அமைச்சா் சாமுவல் ஒகுட்செட்டோ அப்லக் உள்ளிட்டோரை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை சந்தித்தாா்.

‘ரைசினா உரையாடல்’ மாநாட்டுக்கிடையே நடைபெற்ற இந்தச் சந்திப்புகள் குறித்து அமைச்சா் ஜெய்சங்கா் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெவ்வேறு பதிவுகளாக பதிவிட்டிருந்தாா்.

இதேபோன்று, நியூஸிலாந்து பிரதமரின் தொழில்துறை, கலாசார குழுவினருடன் இந்திய பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லரையும் அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பின் புகைப்படத்தையும் அமைச்சா் ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டிருந்தாா்.

நாட்டை உலுக்கிய ஹாத்ரஸ் சம்பவம்: பேராசிரியர் மீது மாணவிகள் குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கல்லூரி பேராசிரியர் மீது மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கும் நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஹாத்ரஸ் கல்லூரியில் புவியியல் துறை பே... மேலும் பார்க்க

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பும் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் பகிர்ந்துள்ளார். 9 மாத கா... மேலும் பார்க்க

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம்: மாநிலங்களவையில் வைகோ!

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம் என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முழக்கமிட்டார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட்டத்தில் மணி... மேலும் பார்க்க

கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? - எதிர்கட்சியினர் கேள்வி

மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் மோடி பேசவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா சிவராத... மேலும் பார்க்க

முடி உதிர்வைத் தடுக்க சிகிச்சை: 67 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பஞ்சாப் மாநிலத்தில் முடி உதிர்வைத் தடுக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவர்ம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பின் சங்ரூரில் உள்ள ஒரு கோவிலில் முடி உத... மேலும் பார்க்க

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம்! ராகுல் சூளுரை

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும் என்றும் அதனை நாங்கள் நடத்திக் காட்டுவோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடு... மேலும் பார்க்க