செய்திகள் :

ஸ்வீடன், அயா்லாந்து வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் சந்திப்பு

post image

ஸ்வீடன், அயா்லாந்து, ஸ்லோவீனியா, கானா ஆகிய நாடுகளைச் சோ்ந்த வெளியுறவு அமைச்சா்களை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தில்லியில் தனித்தனியே திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்புகளில் அந்தந்த நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

உலகளாவிய அரசியல்-பொருளாதாரம் குறித்து விவாதிக்கும் ‘ரைசினா உரையாடல்’ மாநாடு தில்லியில் 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. 125-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனா்.

அந்தவகையில், இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ஸ்வீடன் வெளியுறவு அமைச்சா் மரியா ஸ்டெனா்காா்ட், அயா்லாந்து வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சா் சைமன் ஹாரிஸ் டினைஸ்டே, ஸ்லோவீனியா வெளியுறவு அமைச்சா் தான்யா ஃபாஜோன், கானா வெளியறவு அமைச்சா் சாமுவல் ஒகுட்செட்டோ அப்லக் உள்ளிட்டோரை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை சந்தித்தாா்.

‘ரைசினா உரையாடல்’ மாநாட்டுக்கிடையே நடைபெற்ற இந்தச் சந்திப்புகள் குறித்து அமைச்சா் ஜெய்சங்கா் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெவ்வேறு பதிவுகளாக பதிவிட்டிருந்தாா்.

இதேபோன்று, நியூஸிலாந்து பிரதமரின் தொழில்துறை, கலாசார குழுவினருடன் இந்திய பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லரையும் அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பின் புகைப்படத்தையும் அமைச்சா் ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டிருந்தாா்.

அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகள்!

கடந்த 10 ஆண்டுகளில் (2024 - 25) அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 193 பேர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தாலும், அவர்களில் 2 பேர் மீதான வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்... மேலும் பார்க்க

மாநில வளர்ச்சி: பிரதமர் மோடியுடன் சத்தீஸ்கர் முதல்வர் ஆலோசனை!

புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் சந்தித்து மாநில வளர்ச்சி குறித்து விரிவாக விவாதித்தார்.இந்த சந்திப்பின்போது, பஸ்தார் நகரின் வளர்ச்சிக்கான திட்டத்தை முதல்வர... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை முன்பே திட்டமிடப்பட்டது: தேவேந்திர ஃபட்னவீஸ்

நாக்பூரில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரம் முன்பே திட்டமிடப்பட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்கசீப்பில் கல்லறையை அகற்ற வேண்... மேலும் பார்க்க

நாட்டை உலுக்கிய ஹாத்ரஸ் சம்பவம்: பேராசிரியர் மீது மாணவிகள் குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கல்லூரி பேராசிரியர் மீது மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கும் நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஹாத்ரஸ் கல்லூரியில் புவியியல் துறை பே... மேலும் பார்க்க

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பும் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் பகிர்ந்துள்ளார். 9 மாத கா... மேலும் பார்க்க

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம்: மாநிலங்களவையில் வைகோ!

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம் என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முழக்கமிட்டார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட்டத்தில் மணி... மேலும் பார்க்க