செய்திகள் :

ஹிமாசல்: தீ விபத்தில் சுற்றுலாப் பயணி பலி! 2 பேர் படுகாயம்!

post image

ஹிமாசல பிரதேசத்தின் தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் பலியாகியுள்ளார்.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளான ரித்தேஷ், அஷிஷ் மற்றும் அவ்தூத் ஆகிய மூவரும் சிம்லாவின் கச்சிகாட்டி பகுதியிலுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர், நேற்று (பிப்.28) இரவு 11.30 மணியளவில் அவர்கள் தங்களது அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்போது, அஷிஷ் மற்றும் அவ்தூத் ஆகிய இருவரும் தீக்காயங்களுடன் அந்த அறையிலிருந்த தப்பித்த நிலையில், தீயினுள் சிக்கிக்கொண்ட ரித்தேஷ் பரிதாபமாக பலியானார். பின்னர், அவர்கள் இருவரும் இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிக்க: வேலைவாய்ப்பின்மை அரசுக்கு பெரிய சவால்: உ.பி. அரசு

இதனைத் தொடர்ந்து, மற்ற அறைகளில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர், தீயணைப்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சுமார் 6 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் பல மணி நேரம் போராட்டத்திற்கு பின் அந்த தீயானது அணைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தீ விபத்தினால் அந்த தங்கும் விடுதியின் மூன்று அறைகள் மொத்தமுமாக எரிந்து சாம்பலானதுடன் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அந்த விடுதி உரிமையாளரின் கவனக்குறைவே காரணம் எனத் தெரியவந்தையொட்டி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பலியான ரித்தேஷின் உடல் கைப்பற்றப்பட்டு உடற் கூராய்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த சோதனையின் பின் அவரது குடும்பத்தினரிடன் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறை வெளிநாடு பயணம் செய்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!

பாகிஸ்தானில் முதல் முறையாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் அந்நாட்டு மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா, குஜராத், சியால்கோட், மண்டி, பஹாவுத்தீன் மற்றும... மேலும் பார்க்க

போதைப் பழக்கத்திற்கு அடிமையான பெண்! முகத்தில் உருவான ஓட்டை!

அமெரிக்காவில் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையான பெண்ணின் முகத்தில் ஓட்டை உருவாகி அவருக்கு தற்போது 15க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இலினொயிஸ் மாகாணத்தின் சிகாகோ நகரத்தைச் சேர்ந்... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்கா: புதியதாக மூன்று குரங்கு அம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு!

தென் ஆப்பிரிக்கா நாட்டில் மூன்று புதிய குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறையின் செய்தி தொடர்பாளர் ஃபோஸ்டர் மொஹாலே கூற... மேலும் பார்க்க

மசூதியில் குண்டு வெடிப்பு: தலைமை இமாமை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலுள்ள மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கைபர் பக்துன்குவாவின் மொந்ஷேரா மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு!

ஹரியாணா மாநிலம் அம்பலா மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தின் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அம்பலா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (மார்ச்.1) வழக்கு விசாரணைக்காக ஒரு நபர் ஆஜராகியுள்ளார். அப்போது... மேலும் பார்க்க

அசாம்: ரூ.2.2 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.சாச்சார் மாவட்டத்தில... மேலும் பார்க்க