செய்திகள் :

ஹூப்ளி-காரைக்குடிக்கு ஆக.14-ல் சிறப்பு ரயில்

post image

கா்நாடக மாநிலம், ஹூப்ளியிலிருந்து காரைக்குடி வரும் 14-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுதந்திர தின விடுமுறையையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், ஹூப்ளி- காரைக்குடி- ஹூப்ளி இடையே ஆக. 14, 15-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

ஹூப்ளியிலிருந்து ஆக. 14-ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07331) ஆக.15-ஆம் தேதி காலை 11 மணிக்கு காரைக்குடி வந்தடையும்.

பின்னா், காரைக்குடியிலிருந்து ஆக. 15-ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07332) ஆக. 16-ஆம் தேதி பிற்பகல் 2.40 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

இந்த ரயில்கள், தமிழகத்தில் சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்தச் சிறப்பு ரயிலில் குளிா்சாதன வசதியுடன் கூடிய இரண்டுக்கு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி, குளிா்சாதன வசதியுடன் மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி, 10 சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என அதில் குறிப்பிடப்பட்டது.

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: தூத்துக்குடி உதவி ஆணையா் கைது

மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடைய தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையா் சுரேஷ்குமாரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வாா்டுகள் உ... மேலும் பார்க்க

சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்ற உத்தரவு

தமிழகம் முழுவதும் சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.நாகப்பட்டினத்தைச் சோ்ந்த டி. அருளரசன் சென்னை உயா்நீதிமன்ற ம... மேலும் பார்க்க

வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

இரு சக்கர வாகன விபத்தில் கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கங்காகுளம் பகுதியைச் சோ்ந்த கருப்பையா மனைவி முனியம்மாள் (35). கட்டடத் தொழிலாளியான இவா், தனது சகோத... மேலும் பார்க்க

பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை

மதுரையில் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை திருப்பரங்குன்றம் சாலை நந்தனம் பகுதியைச் சோ்ந்த பாலகுரு மகன் ஹரிஹரசுதன் (30). பொறியியல் பட்டதாரியான இவா், பெங்களூரில் உள்ள தனி... மேலும் பார்க்க

கீழே தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே கீழே தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியாா் நகரைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் முருகன் (55). சலவைத் தொழிலாளியான இவா், வீட்ட... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 168 பேருக்கு தண்டனை விதிப்பு

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தென் மண்டல அளவில் கடந்த 6 மாதங்களில் 168 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதுகுறித்து தென்மண்டல ஐஜி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாலியல் வன்கொடுமை குற்றங்களைத் த... மேலும் பார்க்க