செய்திகள் :

ஹைதி: கும்பல் தாக்குதலில் கென்யா அதிகாரி மாயம்!

post image

ஹைதி நாட்டில் குற்றவாளி கும்பல் தாக்கியதில் கென்யா நாட்டு அதிகாரி ஒருவர் மாயமாகியுள்ளதாகக் கூற்ப்படுகின்றது.

கரிபியன் கடல் பகுதியிலுள்ள ஹைதி நாட்டில் ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் பணியமர்த்தப்பட்ட கென்யா நாட்டு அதிகாரி ஒருவர், அங்குள்ள பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து குற்றவாளி கும்பல்கள் நடத்திய தாக்குதலில் மாயமாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு குற்றவாளி கும்பல்களினால் தோண்டப்பட்டதாகக் கருதப்படும் குழியினுள் சிக்கிய ஹைதி காவல் துறையினரை மீட்க நேற்று (மார்ச் 25) கென்யா நாட்டு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

அப்போது, அதில் ஒரு கென்யா நாட்டு அதிகாரி மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாயமான அதிகாரியைப் பற்றிய தகவல்கள் தற்போது வரை வெளியிடப்படாத நிலையில் அவரை மீட்கும் பணியில் சிறப்புப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும், ஹைதியின் உள்ளூர் ஊடகங்களில் கென்யா அதிகாரியின் சீருடையில் கொல்லப்பட்ட நிலையில் ஒருவரது உடல் கிடப்பதைப் பதிவு செய்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

முன்னதாக, குற்றவாளி கும்பல்களின் வன்முறையினால் ஹைதி நாட்டில் சுமார் 10 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

மேலும், அந்நாட்டு தலைநகரை கைப்பற்ற முயற்சிக்கும் கும்பல்களை எதிர்த்து போரிட ஹைதி நாட்டுக்கு 1,000 பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பப்படுவார்கள் என கென்யா உறுதியத்திருந்தது. இதனால், கடந்த 2024 ஜூன் மாதம் முதல் 800 அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பெரு நாட்டில் 2026-ல் பொதுத் தேர்தல்! அதிபர் அறிவிப்பு!

பாரம் தாங்காமல் சாக்கடை உடைந்து கவிழ்ந்த லாரி: ஓட்டுநர்கள் 2 பேர் காயம்

திண்டுக்கல்: நத்தம் அருகே பாரம் தாங்காமல் சாக்கடை உடைந்து லாரி கவிழ்ந்த விபத்தில் லாரி ஓட்டுநர்கள் 2 பேர் காயமடைந்தனர். தென்காசி மாவட்டம், தென்காசியில் இருந்து நெல் உமி மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்ட... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: மோடியை சந்திக்க நேரம் கேட்டு ஸ்டாலின் கடிதம்

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தொகுதி மறுசீர... மேலும் பார்க்க

வடக்கு காஸா மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!

இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து வடக்கு காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் ஸ்தெரோத் நகரத்தின் மீதும் அதன் அருகிலுள்ள விவசாயப் பக... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: 35 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய பாகிஸ்தான்!

மியான்மர் நாட்டில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சுமார் 35 டன் அளவிலான நிவாரணப் பொருள்களை பாகிஸ்தான் அரசு அனுப்பியுள்ளது. மியான்மரில் கடந்த மார்ச் 28 அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான... மேலும் பார்க்க

அமெரிக்காவின் தொடர் தாக்குதலுக்கு இரையாகும் யேமன் நகரங்கள்!

யேமன் நாட்டின் மீது அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக ஹவுதி கிளர்ச்சிப்படை தெரிவித்துள்ளது.யேமனின் வடக்கு சனா மற்றும் சதா மாகாணங்களின் மீது அமெரிக்க கடந்த சில மணி நேரங்களில் மட்டும... மேலும் பார்க்க

தாயகம் திரும்பிய 8.79 லட்சம் ஆப்கன் மக்கள்! எஞ்சியவர்களை நாடு கடத்தும் பாகிஸ்தான்!

பாகிஸ்தானிலிருந்து அப்கான் அகதிகளை தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தும் பணி துவங்கவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வரும் ஆப்கன் குடியுரிமை அட்டை... மேலும் பார்க்க