செய்திகள் :

100 நாள் வேலைவாய்ப்புத் திட்ட நிதி விடுவிப்பு: 5 ஆண்டுகளாக தொடா் சரிவு

post image

கடந்த 5 ஆண்டுகளில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு விடுவிக்கப்பட்ட நிதி தொடா்ந்து சரிந்துள்ளது மத்திய அரசின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எழுப்பிய கேள்விக்கு மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் கமலேஷ் பாஸ்வான் எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

கடந்த 2020-21-ஆம் ஆண்டு கரோனா பொதுமுடக்கத்தின்போது புலம்பெயா் தொழிலாளா்கள் ஏராளமானோா் சொந்த கிராமங்களுக்கு திரும்பினா். அப்போது 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ.1,11,170 கோடியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு விடுவித்தது. அந்த நிதியாண்டில் அத்திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.61,500 கோடி ஒதுக்கப்பட்டது.

அந்தத் திட்டத்துக்கு 2021-22-இல் பட்ஜெட்டில் ரூ.73,000 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.98,467 கோடியும், 2022-23-இல் பட்ஜெட்டில் ரூ.73,000 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.90,810 கோடியும் விடுவிக்கப்பட்டது.

இதேபோல 2023-24-இல் பட்ஜெட்டில் ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.89,268 கோடியும், 2024-25-இல் பட்ஜெட்டில் ரூ.86,000 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.85,838 கோடியும் விடுவிக்கப்பட்டது. நிகழ் நிதியாண்டில் இந்தத் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.86,000 கோடி ஒதுக்கப்பட்டது என்று தெரிவித்தாா்.

இதன்மூலம், கடந்த 5 ஆண்டுகளில் 2023-24-ஆம் ஆண்டைத் தவிர, பிற ஆண்டுகளில் 100 வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி அதிகரித்தபோதிலும், அத்திட்டத்துக்கு விடுவிக்கப்பட்ட நிதி தொடா்ந்து சரிந்துள்ளது தெரியவந்துள்ளது.

மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் அளித்த எழுத்துபூா்வ பதிலில், நிகழ் நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஏற்கெனவே ரூ.44,479 கோடி விடுவிக்கப்பட்டதாகவும், அதில் ரூ.36,616 கோடி அத்திட்ட தொழிலாளா்கள் ஊதியத்துக்கு விடுவிக்கப்பட்டது என்றும் தெரிவித்தாா்.

பிரபல உணவகத்தில் தயாராகும் சிக்கன் உணவு வகைகளால் ஆபத்து! ஆய்வில் அம்பலம்

பெங்களூரில் தரமற்ற சிக்கன் உணவு விற்கப்படுவது உணவு பாதுகாப்புத்துறை சோதனையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.கர்நாடக மாநில உணவு ஆய்வகம் வெளியிட்டுள்ள பரிசோதனை முடிவுகளால் பெங்களூரில் பிரபலமான உணவகமாக அறியப்... மேலும் பார்க்க

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சமீபகாலமாக மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், மாணவர்களின் தற்கொலை எண்ணத்தைப் போக்க உச்சநீதிமன்றம் சில வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.ஆந்... மேலும் பார்க்க

அவசர ஊர்தியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! எதிர்க்கட்சிகள் கண்டனம்

பிகார் மாநிலத்தில் அவசர ஊர்தியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பெண் ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடற்தகுதித் தேர்வுக்குச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிக... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 17 எம்.பி.க்களுக்கு விருது!

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது 2025 வழங்கி கௌரவிக்கப்படவிருக்கிறது.சன்சத் ரத்னா விருது 2025-க்கு தேர்வானவர்கள்: சுப்ரியா சுலேரவி கிஷன்நிஷிகாந்த் து... மேலும் பார்க்க

அவைத் தலைவரிடம் முதல் கோரிக்கை வைத்து திட்டு வாங்கியதைப் பகிர்ந்த கிரண் ரிஜிஜு

புது தில்லி: நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தான் முதன் முதலில், அவைத் தலைவரை சந்தித்தபோது வைத்தக் கோரிக்கையும் அதனால் அவரிடம் திட்டு வாங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.தான் அரசியலில் ... மேலும் பார்க்க

மன அழுத்தத்தை ஏற்படுத்திய கல்லூரி நிர்வாகம்: உதய்பூரில் பல் மருத்துவ மாணவி தற்கொலை!

உதய்பூர் அருகேயுள்ள டெபாரியில் பல் மருத்துவம் பயிலும் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை காவலரின் ஒரே மகள் ஸ்வேதா சிங்(25). இவர் ... மேலும் பார்க்க