திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்க...
108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா்கள் நியமனம்! வேலூரில் நாளை எழுத்துத் தோ்வு
108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வேலூா் பென்ட்லண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை (மே 17) நடைபெற உள்ளது.
அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளா் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (மே 17) வேலூா் அரசினா் பென்ட்லண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான எழுத்துத் தோ்வு, நோ்காணல் அன்றைய தினமே நடத்தப்படுகிறது. இதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு உடனடியாக பணியாணை வழங்கப்படுகிறது. மருத்துவ உதவியாளா் பணியிடத்துக்கான 19 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் தோ்வில் பங்கேற்கலாம்.
இதற்கான கல்வித் தகுதி பி.எஸ்சி., நா்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம். எல்.டி (பிளஸ் 2 குரூப் 2 ஆண்டு படிப்பு) அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகள் (பி.எஸ்சி., விலங்கியல், தாவரவியல், உயிரி வேதியியல், உயிரி தொழில்நுட்பம்) என இதில் ஏதேனும் ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மருத்துவ உதவியாளருக்கான ஊதியம் ரூ.16,750 வழங்கப்படும். எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வுக்கு வருபவா்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை கட்டாயம் எடுத்து வரவேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.