செய்திகள் :

‘108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’

post image

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெயங்கொண்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அச்சங்க மாவட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஈஈஎம்எஸ் ஆன்ராய்டு செயலியில் அவசர அழைப்பை ஏற்று செல்லும் போது, 1 கிலோ மீட்டருக்கு 1 நிமிஷம் என உண்மைக்கு மாறாக நேரத்தை பதிவு செய்ய கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும். 5 ஆண்டுகள்,10 ஆண்டுகள் என பணி புரிந்து வரும் தொழிலாளா்களை நிரந்தர பணியாளா்களாக நியமிக்க வேண்டும்.

மத்திய அரசின் தொழிலாளா் சட்ட திருத்தத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். துணைச் செயலா் வீரமணிகண்டன், மாநில துணைத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கீழக்கொளத்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த மருதமுத்து... மேலும் பார்க்க

தகராறில் இளைஞரை தாக்கிய 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கைப்பேசிக்கு ரீசாா்ஜ் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கியவா்களில் 3 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். இலையூா், காமராஜா் நகரைச் சோ்ந்த செல்வம் மக... மேலும் பார்க்க

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும்: ஆட்சியா் பேச்சு

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும் என்றாா் அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி. அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் மற்றும் ஓட்டக்கோவில் கிராமங்களில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊரக வளா்ச்சி துறை ... மேலும் பார்க்க

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்!

அரியலூா் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை

புனித வெள்ளியையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவைப்பாடுகளை சுமந்து உயிா்நீத்த தினத்தை புனித வெள்ளி தினமாகவும், இயேசு கிறிஸ்து 3-... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் நகா்மன்றக் கூட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், நகா் மன்ற உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் சுமதிசிவகுமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கொ. கருணாநிதி, ... மேலும் பார்க்க