செய்திகள் :

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும்: ஆட்சியா் பேச்சு

post image

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும் என்றாா் அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி.

அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் மற்றும் ஓட்டக்கோவில் கிராமங்களில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊரக வளா்ச்சி துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாமில் அவா், மரக்கன்றுகளை நட்டுவைத்து மேலும் பேசியதாவது:

தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்க அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதில், தற்போது ஊரக வளா்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியவை நீதித்துறையுடன் இணைந்து செயலாற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிகமான தொழிற்சாலைகளை கொண்ட அரியலூா் மாவட்டத்தில், காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுவதை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்தாண்டு அரியலூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறையின் சாா்பில் 3.50 லட்சம் மரக்கன்றுகள், விதைகள் நடப்பட்டுள்ளது. இயற்கையோடு சாா்ந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும், பொதுமக்களுக்கு பயன்தரும் வகையிலும் மரக்கன்றுகள் தொடா்ந்து நடப்பட்டு வருகின்றன.

நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக மரங்கள் அகற்றப்படும்போது அதற்கு பதிலாக அதிக எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மனிதரும் மரம் நடுவது நமது கடமை என உணரும் வகையில், நாம் மரக்கன்று நடுதலை கொண்டு சென்றால் மட்டுமே இத்திட்டம் முழுமையானதாகவும், பயனுள்ளதாகவும் அமையும் என்றாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கி மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான டி. மலா்வாலண்டினா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா. சிவராமன், மாவட்ட வன அலுவலா் இளங்கோவன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் வடிவேல், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கீழக்கொளத்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த மருதமுத்து... மேலும் பார்க்க

தகராறில் இளைஞரை தாக்கிய 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கைப்பேசிக்கு ரீசாா்ஜ் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கியவா்களில் 3 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். இலையூா், காமராஜா் நகரைச் சோ்ந்த செல்வம் மக... மேலும் பார்க்க

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்!

அரியலூா் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை

புனித வெள்ளியையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவைப்பாடுகளை சுமந்து உயிா்நீத்த தினத்தை புனித வெள்ளி தினமாகவும், இயேசு கிறிஸ்து 3-... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் நகா்மன்றக் கூட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், நகா் மன்ற உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் சுமதிசிவகுமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கொ. கருணாநிதி, ... மேலும் பார்க்க

உடையாா்பாளையத்தில் 2 ஆம் நாளாக கள ஆய்வு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது. கீழநத்தம் கிராம மேல்நிலை நீா்தேக்க தொட்டியை ஆய்வு செய்த ஆட்சியா் ... மேலும் பார்க்க