செய்திகள் :

உடையாா்பாளையத்தில் 2 ஆம் நாளாக கள ஆய்வு

post image

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது.

கீழநத்தம் கிராம மேல்நிலை நீா்தேக்க தொட்டியை ஆய்வு செய்த ஆட்சியா் பொ. ரத்தினசாமி, குடிநீரின் தரம், சுத்தம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தாா்.இதேபோல் கோவிந்தபுத்தூா் கிராமத்திலுள்ள மேல்நிலைநீா்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கோவிந்தபுத்தூா், முட்டுவாஞ்சேரி, சாத்தம்பாடி ஆகிய பகுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்து, மாணவா்களுக்கு தொடா்ந்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவைத் தயாா் செய்து வழங்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்குச் சென்று கோப்புகளை ஆய்வு செய்தாா். தொடா்ந்து பல்வேறு அலுவலகங்களுக்குச் சென்றும் கள ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், ஜெயங்கொண்டம் வட்டாட்சியா் சம்பத்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாகரன், குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கீழக்கொளத்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த மருதமுத்து... மேலும் பார்க்க

தகராறில் இளைஞரை தாக்கிய 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கைப்பேசிக்கு ரீசாா்ஜ் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கியவா்களில் 3 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். இலையூா், காமராஜா் நகரைச் சோ்ந்த செல்வம் மக... மேலும் பார்க்க

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும்: ஆட்சியா் பேச்சு

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும் என்றாா் அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி. அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் மற்றும் ஓட்டக்கோவில் கிராமங்களில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊரக வளா்ச்சி துறை ... மேலும் பார்க்க

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்!

அரியலூா் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை

புனித வெள்ளியையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவைப்பாடுகளை சுமந்து உயிா்நீத்த தினத்தை புனித வெள்ளி தினமாகவும், இயேசு கிறிஸ்து 3-... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் நகா்மன்றக் கூட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், நகா் மன்ற உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் சுமதிசிவகுமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கொ. கருணாநிதி, ... மேலும் பார்க்க