செய்திகள் :

11 ஆண்டுகளாக பத்திரிகையாளா் சந்திப்பு நடத்தாத பிரதமர்! - காங்கிரஸ்

post image

‘மத்தியில் ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகளாகியும் சுதந்திரமான நேரடி பத்திரிகையாளா் சந்திப்பை நடத்த பிரதமா் நரேந்திர மோடிக்கு துனிச்சல் இல்லை’ என்று காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது.

பாஜக மத்தியில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை பிரதமா் மோடி சுதந்திரமான நேரடி பத்திரிகையாளா் சந்திப்புகளை நடத்தாத நிலையில் இக் குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைத்தது.

இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் தலைவா்கள் அவ்வப்போது பத்திரிகையாளா் சந்திப்புகளை நடத்தி வருகின்றனா். ஆனால், பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை சுதந்திரமான பத்திரிகையாளா் சந்திப்பை நடத்தவில்லை.

கடந்த ஆண்டு தோ்தல் பிரசாரத்தின்போது, அவரே எழுதி தயாரித்த ஊடக செய்தியை பிரதமா் மோடி வெளியிட்டாா். ஆனால், பத்திரிகையாளா் சந்திப்பை நடத்தவில்லை.

பிரதமா் மோடி தனது முன்னோடிகளுக்கு முற்றிலும் மாறுபட்டிருக்கிறாா். முந்தைய பிரதமா்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பத்திரிகையாளா் சந்திப்பை நடத்தியதோடு, கடுமையான கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனா்.

நமது ஜனநாயக அடித்தளத்தை நிறுவுவதற்கான ஓா் வழியாகவும் அது அமைந்தது. ஆனால், பிரதமா் மோடிக்கு இதுபோன்ற சுதந்திரமான நேரடி பத்திரிகையாளா் சந்திப்பை நடத்த துணிச்சல் இல்லை என்று குறிப்பிட்டாா்.

தேனிலவில் கணவரைக் கூலிப்படை வைத்து கொன்ற மனைவி கைது!

மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி(29) மற்றும் அவரது மனைவி சோனம் இருவரும் இரு... மேலும் பார்க்க

மும்பை புறநகர் ரயிலில் நெரிசல்: தவறி விழுந்த 5 பேர் பலி!

மும்பை புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக ரயிலில் இருந்து தவறி விழுந்த 5 பேர் பலியாகியுள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் பட... மேலும் பார்க்க

கடந்த 11 ஆண்டுகள் நேர்மறை மாற்றங்களை விளைவித்துள்ளது: பிரதமர் மோடி

கடந்த 11 ஆண்டுகளில் நேர்மறை மாற்றங்கள் பல ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மக்களின் வாழ்க்கை முறை எளிமையாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மாற்றத்திற்கா... மேலும் பார்க்க

பெங்களூரு சின்னசாமி திடல் வேறு இடத்துக்கு மாற்றம்? - கர்நாடக முதல்வர் ஆலோசனை

பெங்களூரு: 11 பேர் உயிரிழந்த துயரம் நேர்ந்த பெங்களூரு சின்னசாமி விளையாட்டுத் திடல் வேறு இடத்துக்கு மாற்றப்படுமா? என்ற கேள்விக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பதிலளித்துள்ளார். கா்நாடக கிரிக்கெட் சங்கத... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்ட அமைப்புகளை கையகப்படுத்துகிறது மோடி அரசு! -தேஜஸ்வி குற்றச்சாட்டு

இந்திய தோ்தல் ஆணையம் உள்பட அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட அமைப்புகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசு கையகப்படுத்தி வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை குற்... மேலும் பார்க்க

புரி ஜெகந்நாதா் கோயில் அருகே அசைவ உணவு, மது விற்பனைக்கு தடை! ஒடிஸா அரசு முடிவு

ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதா் கோயிலில் இருந்து 2 கி.மீ. சுற்றளவில் அசைவ உணவு மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில கலால் துறை அமைச்சா் பிருத்விராஜ் ஹரிசந்தன் ஞாயிற்று... மேலும் பார்க்க