செய்திகள் :

130 ஆண்டு கால கனவு.. காஷ்மீருடன் நேரடி ரயில் இணைப்பு!

post image

காஷ்மீரின் பாரமுல்லா - ஜம்மு வின் உதம்பூர் இடையேயான ரயில் பாதையை, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கவிருக்கிறார்.

பல ஆண்டு கால எதிா்பாா்ப்புக்குரிய காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கிவைக்கும் அவா், உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தையும் நாட்டுக்கு அா்ப்பணிக்க உள்ளாா்.

இந்த ரயில் திட்டம் கடந்த 130 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. நாட்டின் பிற பகுதியிலிருந்து காஷ்மீருக்கு ரயில் பாதை என்பது கிட்டத்தட்ட 130 ஆண்டு கால கனவு. இதன் ஒரு பகுதியாக, கட்டமைக்கப்பட்டிருக்கும் அஞ்ஜி பாலம், இந்தியாவின் முதல் கேபிள் -ரயில் பாலம்.

நாளை தொடங்கி வைக்கப்படும் ரயில் திட்டம் மூலம் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து நேரடியாக காஷ்மீர் செல்ல முடியுமா என்பது தெரியவில்லை என்றும், ஜம்முவில் அமைந்துள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள கத்ரா ரயில் நிலையத்தில் இறங்கி மாற்று ரயில் மூலம் காஷ்மீர் செல்ல முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீருடன் நேரடி ரயில் இணைப்புக்கான உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தடத் திட்டம், கடந்த 1997-இல் தொடங்கப்பட்டது. பல்வேறு பிரச்னைகளால், இந்த திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க முடியாமல் போயிருக்கிறது.

மொத்தம் 272 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் இதுவரை 161 கி.மீ. தொலைவு வழித்தடம் ஏற்கெனவே பல்வேறு கட்டங்களாக தொடங்கப்பட்டது. இறுதியாக 111 கி.மீ. தொலைவுள்ள கத்ரா-பனிஹால் வழித்தடப் பணிகள் கடந்த ஜனவரியில்தான் நிறைவடைந்தன.

திட்டப் பணிகள்தான் தாமதம் என்றால், திறப்பிலும் கூட தாமதம் ஏற்பட்டது. காஷ்மீருக்கான நேரடி ரயில் சேவையை பிரதமா் மோடி கடந்த ஏப்ரலில் திறந்துவைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக பிரதமரின் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜூன் மாதம் 6ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட இருக்கிறது.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க