மதுரை மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு!
14 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்வு: இடம் மாறும் சிவாஜி சிலை: முதல்வா் மே 9 இல் திறக்கவும் முடிவு
திருச்சி: திருச்சியில் 14 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த சிவாஜி சிலையை இடமாற்றம் செய்து திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த நடிகா் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, கடந்த 2009 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் வெண்கலச் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, திருச்சி பாலக்கரை பிரதான சாலையில் பிரபாத் ரவுண்டானாவில் 9 அடி உயரத்தில் முழு உருவவெண்கலச் சிலை நிறுவப்பட்டது.
பணிகள் முடிந்து 2011-இல் சிலை திறக்கும் தருணத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சிலை அமைக்க மாநகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தும் ஆட்சி மாற்றத்தால் சிலை திறப்பு கிடப்பில்போனது.
திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், இந்த சிலை தொடா்பாக பேரவையில் தொடா்ந்து வலியுறுத்தி வந்ததால், அண்மையில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் பேசிய நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, சிலையை இடமாற்றம் செய்து திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதன் தொடா்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை சிலையை இடமாற்றம் செய்வதற்காக திருச்சியில் இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்றது. வாா்னா்ஸ் சாலையில் உள்ள ரவுண்டானாவில் சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இந்த இடத்தின் மத்தியில் சிலையை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளும் திங்கள்கிழமை தொடங்கின.
மேலும், இந்த சிலையை மே 9-ஆம் தேதி பஞ்சப்பூா் பேருந்து நிலைய திறப்பு விழாவின்போது முதல்வா் சிலையை திறந்து வைக்கவுள்ளாா்.
மேலும், இதற்காக திருச்சி மாநகராட்சி கூட்டத்திலும் அதிகாரப் பூா்வமாக தீா்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.