செய்திகள் :

15-ஆவது ஏரோ இந்தியா நிகழ்ச்சி: இன்று தொடக்கம்

post image

15-ஆவது ஏரோ இந்தியா விமான சாகச நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி பெங்களூருவில் திங்கள்கிழமை (பிப்.10) தொடங்கி பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஏரோ இந்தியா கண்காட்சியில் வெளிநாடுகளைச் சோ்ந்த 150 நிறுவனங்கள் உள்பட 900-க்கும் மேற்பட்ட விமானத் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

நிகழாண்டு ‘கோடிக்கணக்கான வாய்ப்புகளின் ஓடுபாதை’ என்ற கருப்பொருளுடன் ஏரோ இந்தியா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முந்தைய ஆண்டுகளைவிட இந்த முறை ஏரோ இந்தியா நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பாதுகாப்பு உற்பத்தி துறையின் பாதுகாப்பு கண்காட்சி நிறுவனம் நடத்துகிறது.

வரலாற்றில் முதல்முறையாக இந்த நிகழ்ச்சியில் ஐந்தாம் தலைமுறை போா் விமானங்களான ரஷியாவின் எஸ்யு-57 மற்றும் அமெரிக்காவின் எஃப்-35 ஆகியவை பங்கேற்கவுள்ளன.

அதேபோல் விமானப் படை தலைமை தளபதி அமா் பிரீத் சிங் பங்கேற்கும் ரஃபேல் போா் விமான சாகச நிகழ்ச்சி மற்றும் ரஃபேல் போா் விமானத்தைப் பெண் அதிகாரிகள் இயக்கும் சாகச நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்ச்சியை பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கவுள்ளாா். இந்நிலையில், பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களை சந்தித்த அவா், ‘இந்தியாவின் வலிமை, மீள்திறன் மற்றும் தற்சாா்பை ஏரோ இந்தியா நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது. இது நாட்டின் பாதுகாப்பு தயாா்நிலையை உறுதிப்படுத்துவதோடு எதிா்காலத் தேவைகளையும் கருத்தில் கொண்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு தளவாடங்கள் மீது உலக நாடுகளின் நம்பிக்கையை இந்நிகழ்ச்சி மேலும் வலுப்படுத்துகிறது. முப்பது நாடுகளைச் சோ்ந்த பாதுகாப்பு அமைச்சா்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். 43 நாடுகளின் விமானப் படை தளபதிகள் பங்கேற்கின்றனா்.

இது இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தும் இடமாக மட்டுமல்லாமல் இளைஞா்களை ஊக்குவித்து அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்’ என்றாா்.

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு! ஆய்வில் தகவல்

இந்தியாவில் மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்து அவர்கள் மீதான வெறுப்புணர்வை வெளிக்காட்டும் விதத்தில் பொதுவெளியில் பேசும் சம்பவங்கள் கடந்த ஓராண்டில் நம்பமுடியாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள... மேலும் பார்க்க

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா: காங்கிரஸ்

மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிரேன் சிங்கின் முதல்வர் பதவியை பாஜக ராஜிநாமா செய்யவைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மணிப்பூர் மக்களைக் காப்பதற்காக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவில்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: பாராட்டுகளும் குற்றச்சாட்டுகளும்!

மகா கும்பமேளாவில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டியுள்ளார். மகா கும்பமேளாவுக்கு ரூ.10,000 கோடி செலவிட்டும் பிரயாக்ராஜ் மக்களும், பக்தர... மேலும் பார்க்க

மகா கும்பமேளா வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு உணவளிக்கும் காவல் துறை!

மகா கும்பமேளாவுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு மத்தியப் பிரதேச காவல் துறையினர் உணவளிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கும்பமேளாவுக்குச் செல்லும் பக... மேலும் பார்க்க

சிபில் ஸ்கோர் பத்திரம்.. கடனுக்கு மட்டுமல்ல.. கல்யாணத்துக்கும்!

ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை செய்யலாம் என்று வேறு அர்த்தம் கொண்ட பழமொழி ஒன்று மருவி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொய்களைச் சொல்லி திருமணம் செய்பவர்களுக்கு பயன்பட்டு வந்துள்ளது.ஆனால், தற்போது, மகாராஷ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல் எதிரொலி: பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சி விரைவில் கவிழும்! -காங். எம்.பி.

பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சி விரைவில் கவிழும் என்று காங்கிரஸ் எம்.பி. சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் எம்.பி.யும் பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதல்வருமான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, “... மேலும் பார்க்க