செய்திகள் :

19 சதவீதம் சரிந்த வீடுகள் விற்பனை

post image

கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான ப்ராப்டைகா் வெளியிட்டுள்ள ‘ரியல் இன்சைட்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மாா்ச்) சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புணே, அகமதாபாத் ஆகிய இந்தியாவின் எட்டு முக்கிய வீடு-மனைச் சந்தைகளில் 98,095 வீடுகள் விற்பனையாகின. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 19 சதவீதம் குறைவு. அப்போது இந்த எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 1,24,642-ஆக இருந்தது.

ஜனவரி-மாா்ச் காலாண்டில் பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களில் மட்டுமே வீடுகள் விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது. பெங்களூரில் விற்பனை 13 சதவீதம் உயா்ந்து 11,731 யூனிட்களாகவும், சென்னையில் 8 சதவீதம் அதிகரித்து 4,774 யூனிட்களாகவும் உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இந்த எண்ணிக்கைகள் முறையே 10,381 மற்றும் 4,427-ஆக இருந்தன.

மதிப்பீட்டுக் காலாண்டில் மும்பை பெருநகரப் பகுதியில் 30,705 வீடுகள் விற்பனையாகின. இருந்தாலும், முந்தைய ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 26 சதவீதம் குறைவாகும். அப்போது இந்தப் பகுதியில் வீடுகள் விற்பனை 41,594-ஆக இருந்தது.

2024-ஆம் ஆண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டோடு ஒப்பிடுகையில் வீடுகள் விற்பனை புணேயில் 25 சதவீதம் குறைந்து 17,228 யூனிட்களாகவும், ஹைதராபாதில் 26 சதவீதம் சரிந்து 10,647 யூனிட்களாகவும், தில்லி-என்சிஆரில் 16 சதவீதம் குறைந்து 8,477 யூனிட்களாகவும் உள்ளது.

அகமதாபாதில் கடந்த நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் 12,915-ஆக இருந்த வீடுகள் விற்பனை, நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 17 சதவீதம் சரிந்து 10,730-ஆக உள்ளது. அதேபோல், கொல்கத்தாவில் வீடுகள் விற்பனை 1 சதவீதம் குறைந்து 3,803 யூனிட்களாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இந்த எண்ணிக்கை 3,857-ஆக இருந்தது.

புதிய வீடுகளின் விநியோகமும் இந்தக் காலாண்டில் 10 சதவீதம் குறைந்து 93,144 யூனிட்களாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது 1,03,020 யூனிட்களாக இருந்தது.

விலை உயா்வு மற்றும் புதிய திட்டங்களின் குறைவு ஆகியவை வாங்குபவா்களை எச்சரிக்கையாக இருக்கச் செய்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம்: டிரம்ப் அரசு திட்டம்

சீன சரக்குக் கப்பல்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: கப்பல் கட்டும் தொழிலில் ... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்பில் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டிக்கர் பயன்படுத்துவதை எளிதாக்கும் வகையில் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.பயனர்கள் நண்பர்களுடன் உரையாடும்போது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காக ஸ்டிக்கர் ஆப்ச... மேலும் பார்க்க

சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு

முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டு... மேலும் பார்க்க

2,850 கோடி டாலராகக் குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி

சா்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 2,850 கோடி டாலராகக் குறைந்துள்ளது.இது குறித்து நவரத்தின, ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன... மேலும் பார்க்க

நிஸ்ஸான் இயக்குநர்கள் குழுவிலிருந்து விலகும் ரெனால்ட் தலைவர்!

டோக்கியோ: நிஸ்ஸான் நிறுவனத்தின் சரிவைச் சமாளிக்கும் வகையில், அதன் இயக்குநர்கள் குழுவிலிருந்து ரெனால்ட் தலைவர் ஜீன்-டொமினிக் செனார்ட் விலக உள்ளதாக ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் தெரிவித்துள்ளார். நிஸ்ஸானி... மேலும் பார்க்க

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிகர லாபம் 1.8% உயர்வு!

புதுதில்லி: ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட், மார்ச் காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம், 1.8 சதவிகிதம் உயர்ந்து ரூ.316.11 கோடியாக உள்ளது.முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்க... மேலும் பார்க்க