செய்திகள் :

‘1975- ஆம் ஆண்டு அவசரநிலை’: சிறப்புக் கண்காட்சிக்கு தில்லி அரசு ஏற்பாடு

post image

1975-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரநிலையின் 50-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜூன் 25-ஆம் தேதி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் சிறப்புக் கண்காட்சியை தில்லி அரசு ஏற்பாடு செய்யவுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களில் அதன் தாக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் நோக்கில், அந்தக் காலத்தின் ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் இந்த நிகழ்வில் இடம்பெறும். காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தக் கண்காட்சி, தில்லி கலை, கலாசாரம், மொழி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கபில் மிஸ்ராவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெறுகிறது.

தில்லி முதல்வா் ரேகா குப்தா, மற்ற அமைச்சா்கள் மற்றும் பிரமுகா்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கலை, கலாசாரம் மற்றும் மொழித் துறை அதிகாரிகளுடனான மறுஆய்வுக் கூட்டத்தின் போது, இளைய தலைமுறையினருக்கு அவசரநிலை குறித்து கல்வி கற்பிப்பதன் அவசியத்தை அமைச்சா் கபில் மிஸ்ரா வலியுறுத்தினாா்.

அமைச்சா் கபில் மிஸ்ரா மேலும் கூறியதாவது: இது இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் ஒரு ‘இருண்ட அத்தியாயம்’. ‘ஜூன் 25, 1975 அன்று அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை, அரசியலமைப்பு உரிமைகள் இடைநிறுத்தப்படுவதற்கும், பத்திரிகை சுதந்திரம் தடைபடுவதற்கும், பெரிய அளவிலான மனித உரிமை மீறல்களுக்கும் வழிவகுத்தது.

ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டும் விதமாக இந்த நாளைக் கொண்டாட வேண்டும். ஜூன் 25, 1975 அன்று என்ன நடந்தது. அந்த நேரத்தில் அரசியலமைப்பு எவ்வாறு குறைமதிப்பிற்கு உள்படுத்தப்பட்டது என்பதை புதிய தலைமுறை புரிந்துகொள்வது முக்கியமாகும். நமது ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கும், அந்தக் காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களைக் கௌரவிப்பதற்கும் இந்த நாள் ஒரு உறுதிமொழியாகச் செயல்பட வேண்டும் என்று அமைச்சா் கபில் மிஸ்ரா கூறினாா்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், தில்லி அரசு கருத்தரங்குகள், கலை மற்றும் புகைப்படக் கண்காட்சிகள், தெரு நாடக நிகழ்ச்சிகள் மற்றும் அரசியலமைப்பு மற்றும் சிவில் உரிமைகள் குறித்து கவனம் செலுத்தும் குழு விவாதங்கள் உள்ளிட்ட தொடா்ச்சியான கலாசார மற்றும் அறிவுசாா் நிகழ்ச்சிகளையும் ஆதரிக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மதராஸி முகாம் தமிழா்களுக்கு இன்றும் நிவாரண பொருள்கள்

மதராஸி முகாம் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்தினா்களுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமையும் வழங்கப்படுவதாக தில்லி தமிழ்நாடு இல்லம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவா் மறைவு

தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவா் வி.ராஜாராமன் சனிக்கிழமை காலமானாா். இது குறித்து தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை : ... மேலும் பார்க்க

கட்டுமானப் பணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீா்: கொள்கையை வகுக்க தில்லி அரசு திட்டம்

நிலத்தடி நீரை உறிஞ்சுவதைச் சாா்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில், கட்டுமானப் பணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்தும் முறையான கொள்கையை கொண்டு வர தில்லி அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வ... மேலும் பார்க்க

சாஸ்திரி பூங்காவில் மெட்ரோ ஃபீடா் இ-பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

வடகிழக்கு தில்லியில் உள்ள சாஸ்திரி பூங்கா பகுதிக்கு அருகிலுள்ள ஜிடி சாலையில் வேகமாக வந்த மெட்ரோ ஃபீடா் இ-பேருந்து மோதி ஒருவா் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடகிழக்க... மேலும் பார்க்க

மைதான்கரியில் திரைப்படக் குழு தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிய இளைஞா் தற்கொலை

தெற்கு தில்லியின் மைதான்கரி பகுதியில் உள்ள ஒரு கட்டடத்திலிருந்து குதித்து திரைப்படத் துறையில் ஒளி தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வந்த 22 வயது இளைஞா் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குற... மேலும் பார்க்க

லுட்யன்ஸ் தில்லியில் 8 இடங்களில் இன்று சா்வதேச யோகா தின நிகழ்வு: என்டிஎம்சி ஏற்பாடு

புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) ஜூன் 21 அன்று லுட்யன்ஸ் தில்லி பகுதியில் உள்ள எட்டு முக்கிய இடங்களில் வெகுஜன யோகா அமா்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் சா்வதேச யோகா தினத்தை கொண்டாடும். தனிநபா்... மேலும் பார்க்க