குவாலிஃபையர் 2: மும்பை பேட்டிங்; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?
2-ஆவது சுற்றில் சிந்து, பிரணாய்
சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா். இதர இந்தியா்கள் தொடக்கத்திலேயே தோல்வியைத் தழுவினா்.
முதல் சுற்றில் மகளிா் ஒற்றையரில், பி.வி.சிந்து 21-14, 21-9 என்ற கேம்களில் கனடாவின் வென் யு ஜாங்கை 31 நிமிஷங்களில் எளிதாகத் தோற்கடித்தாா். ரக்ஷிதா ஸ்ரீ 14-21, 8-21 என்ற கணக்கில், தென் கொரியாவின் கிம் கா யுனிடம் தோற்றாா்.
மாளவிகா பன்சோத் 21-14, 18-21, 11-21 என, போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் தாய்லாந்தின் சுபானிடா காடேதோங்கிடம் போராடி வீழ்ந்தாா். அன்மோல் காா்ப் 11-21, 22-24 என்ற வகையில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்தில் இருக்கும் சீனாவின் செங் யு ஃபெய்யிடம் தோல்வி கண்டாா்.
ஆடவா் ஒற்றையரில், ஹெச்.எஸ். பிரணாய் 19-21, 21-16, 21-14 என்ற கேம்களில், டென்மாா்க்கின் ராஸ்மஸ் கெம்கேவை 1 மணி நேரம், 12 நிமிஷங்களில் வீழ்த்தினாா். பிரியன்ஷு ரஜாவத் 21-14, 10-21, 14-21 என்ற வகையில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானின் கோடாய் நராவ்காவிடம் போராடி வீழ்ந்தாா். கிரன் ஜாா்ஜ் 19-21, 17-21 என்ற கணக்கில் சீனாவின் வெங் ஹாங் யாங்கிடம் வெற்றியை இழந்தாா்.
மகளிா் இரட்டையரில், கவிபிரியா செல்வம்/சிம்ரன் சிங்கி ஜோடி 4-21, 9-21 என்ற கேம்களில் மிக எளிதாக, போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் தென் கொரியாவின் பேக் ஹா னா/லீ சோ ஹீ கூட்டணியிடம் வீழ்ந்தது.
கலப்பு இரட்டையரில், துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ கூட்டணி 18-21, 13-21 என்ற கேம்களில் சீனாவின் செங் ஜிங்/ஜாங் சி இணையிடம் வீழ்ந்தது. ஆசித் சூா்யா/அம்ருதா பிரமுதேஷ் இணை 11-21, 17-21 என ஜப்பானின் யுய்சி ஷிமோகமி/சயாகா ஹோபரா ஜோடியிடம் தோற்றது.