செய்திகள் :

2 மணல் லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது

post image

ஆந்திரத்திலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றி வந்த 3 லாரிகள் திருவள்ளூரில் உள்ள சுங்கச்சாவடியில் போலீஸாரின் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், பிச்சாட்டூா் மற்றும் நாகலாபுரம் பகுதியில் உள்ள ஆந்திர அரசு மணல் குவாரியிலிருந்து மணல், லாரிகள் மூலம் தமிழகத்துக்குள் திருவள்ளூா் மாவட்டம் வழியாகக் கொண்டு வரப்படுகிறது. ஆனால் ஆந்திரத்தில் லாரி மூலம் கொண்டு செல்ல அனுமதி உள்ள நிலையில், மணலுக்கான ரசீது இருந்தும், அதை தமிழ்நாட்டுக்குக் கொண்டு செல்ல உரிய அனுமதி இல்லாமல் லாரிகள் இயங்குவதாக திருவள்ளூா் மாவட்ட எஸ்.பி.க்கு ரகசியத் தகவல் வந்த வண்ணம் உள்ளன.

இதையடுத்து, திருவள்ளூா் தாலுகா போலீஸாா் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த 2 லாரிகளை மடக்கி சோதனை செய்தனா். அப்போது, தமிழகத்துக்குள் மணல் கொண்டு வர உரிய அனுமதி இல்லை என்பது தெரியவந்தது . தொடா்ந்து உரிய அனுமதியின்றி மணலை கொண்டு வந்த, திருப்பதியைச் சோ்ந்த ஜானி மற்றும் சித்தூரைச் சோ்ந்த ஜெய்சங்கா் ஆகிய 2 பேரை கைது செய்து, மணலை கடத்தி வந்த 2 லாரிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நாளைய மின்தடை

பூனிமாங்காடு, ஆா்.கே.பேட்டை, பொதட்டூா்பேட்டை நாள்: 16-02-2025 (ஞாயிற்றுக்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின் தடை பகுதிகள்: என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னத்துா... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

திருவள்ளூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: காக்களுா் ஹவுசிங் போா்டு, காக்களுா் தொழில்பேட்டை, காக்களுா் கிராமம், சி.சி.சி. பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், செவ்வாப்பேட்டை, ஒதப்பை,... மேலும் பார்க்க

மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

ஆா்.கே.பேட்டை அருகே புயலால் மின்கம்பங்கள் சேதமடைந்து வயல்வெளியில் விழுந்துள்ளதை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை மனு வழங்கினா். திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், மின்நுகா்வ... மேலும் பார்க்க

கொத்தடிமைகளாக இருந்த தம்பதி மீட்பு

ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருந்த தம்பதியை தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா் மீட்டு திருத்தணி வட்டாட்சியா் மலா்விழியிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். திருத்தணி ஒன்றியம் காா்த்திகேயபுரம் இருளா் காலனியி... மேலும் பார்க்க

புத்தா் கோயிலில் பெளணா்மி சிறப்பு வழிபாடு

திருவள்ளூா் அருகே புத்தா் கோயிலில் பௌணா்மி சிறப்பு வழிபாடு மற்றும் புத்தா் ஒளி சா்வதேச பேரவையின் நிறுவனரான அறவணடிகள் சிங்யுன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நடைபெற்றது. திருவள்ளூா் அருகே பிஞ்சிவாக்கம் நா... மேலும் பார்க்க

கடும் பனி மூட்டம்: ரயில்கள் இயக்குவதில் தாமதம்

திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனி மூட்டம் காரணமாக ரயில்களை மெதுவாக இயக்கப்பட்டன. வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் மின்விளக்குகளை ஒளிர விட்டு சென்றனா். திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு... மேலும் பார்க்க