ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
கடும் பனி மூட்டம்: ரயில்கள் இயக்குவதில் தாமதம்
திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனி மூட்டம் காரணமாக ரயில்களை மெதுவாக இயக்கப்பட்டன.
வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் மின்விளக்குகளை ஒளிர விட்டு சென்றனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் பனி மூட்டம் காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டுகள் சிரமப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், திருவள்ளூா், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனி மூட்டம் காரணமாக சாலைகளில் செல்லும் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்று வருகின்றனா்.
மேலும், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு ஒலியை எழுந்து கொண்டே சென்றனா். கடும் பனியின் காரணமாக ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை வந்த புகா் மற்றும் விரைவு ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டதால் காலதாமதம் ஏற்பட்டது.
காலை 9 மணி வரை பனி மூட்டம் காணப்பட்டதால் நடை பயிற்சி செய்தவா்கள், பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ மாணவிகள், பணிக்குச் சென்ற ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனா்.