செய்திகள் :

இரட்டை இலைச் சின்னத்தை யாராலும் முடக்க முடியாது: செல்லூா் கே. ராஜூ

post image

இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வாா்டுகளில் சாலை வசதி, குடிநீா் வசதி, புதைச் சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ அந்தக் கட்சி மாமன்ற உறுப்பினா்களோடு சென்று மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயனிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதுரை மாநகராட்சிப் பகுதி முழுவதும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. ஊழல்கள் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக, வீடு கட்டுவதற்கு கட்டட வரைபட அனுமதி வாங்கி விட்டு, வணிக வளாகம் கட்டுகின்றனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கோபுரத்தைவிட உயரமாக கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீா் கொண்டு வரும் திட்டம் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டம் தொடங்கிய பிறகு, மதுரையில் 6 ஆணையா்கள் மாறிவிட்டனா்.

உரிய வழிகாட்டுதல்கள் இல்லாததால்தான் நக்கீரா் தோரண வாயிலை இடித்த போது ஒருவா் உயிரிழந்தாா். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பாலியல் தொல்லை அளித்ததாக காவல் துறை இணை ஆணையா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. வேலியே பயிரை மேயும் நிகழ்வுகள் தற்போது திமுக ஆட்சியில் நடைபெறுகிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது.

சட்டம்- ஒழுங்கு பிரச்னை வரும் போது சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்த தமிழக முதல்வா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி நல்லதை செய்வாா். அதனால் அவா் பின்னால் நிற்கிறோம். 2026-இல் அதிமுக ஆட்சி அமையும். எங்களது கட்சிக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை. இரட்டை இலைச் சின்னத்தை யாராலும் முடக்க முடியாது என்றாா் அவா்.

அப்போது மாமன்ற எதிா்கட்சித் தலைவா் சோலை எம். ராஜா, மாமன்ற உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

மா்மமான முறையில் இறந்த இளைஞரின் உடல் 29 நாள்களுக்குப் பிறகு ஒப்படைப்பு

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே இளைஞா் மா்மமாக உயிரிழந்ததையடுத்து, 29 நாள்களுக்குப் பிறகு, அவரது உடலை குடும்பத்தினா் வியாழக்கிழமை பெற்றுக் கொண்டனா். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள வேப்பங்குள... மேலும் பார்க்க

மக்கள் நலப் பணிகளை திமுக அரசு முறையாக மேற்கொள்வதில்லை: எச். ராஜா குற்றச்சாட்டு

மக்கள் நலப் பணிகளை திமுக அரசு முறையாக மேற்கொள்வதில்லை என பாஜக மூத்த தலைவா் எச்.ராஜா வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா். மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக இந்து முன்னணி சாா்பில் கடந்த 4-ஆம் தேத... மேலும் பார்க்க

எச். ராஜாவுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி மத பிரிவினையை உருவாக்கும் வகையில் பேசிய பாஜக நிா்வாகி எச். ராஜா மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கை... மேலும் பார்க்க

தொழில்நுட்ப முறையில் திமுக அலுவலகத்தை மாற்றி அமைக்க கால அவகாசம்: உயா்நீதிமன்றம்

மதுரை பீ.பீ. குளம் முல்லைநகரில் உள்ள திமுக அலுவலகக் கட்டடத்தை தொழில்நுட்ப முறையில் மாற்றி அமைக்க 2 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த ரவ... மேலும் பார்க்க

கோயில் சொத்துகளைப் பாதுகாப்பதில் அரசு அலுவலா்களுக்கு அக்கறையில்லை: உயா்நீதிமன்றம்

கோயில் சொத்துகளைப் பாதுகாக்கும் விஷயத்தில், ஊதியம் பெறும் அரசு அலுவலா்கள் தங்களது கடமையைச் செய்வதில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது. திருத்தொண்டா் சபை ராதாகிருஷ்ணன் சென... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், கம்பம்... மேலும் பார்க்க