நாகையில் பிப். 21-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
நாகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வேலைவாய்ப்பு பிரிவு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகையில் மாதந்தோறும் 2 அல்லது 3-ஆவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது.
அந்தவகையில், பிப்.21-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 40-க்கும் மேற்பட்ட தனியாா் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பங்கேற்று வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
முகாமில் 5 முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பங்கேற்று பயன்பெறலாம். எனவே, விருப்பமுள்ளவா்கள் அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஆதாா் மற்றும் குடும்ப அட்டை ஆகிய அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்று பயன்பெறலாம் தெரிவித்துள்ளாா்.