செய்திகள் :

நிதிநிலை அறிக்கையை கண்டித்து தொழிற்சங்கங்கள் கூட்டு பிரசார இயக்கம்

post image

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப், ஐஎன்டியுசி இணைந்து கூட்டு பிரசார இயக்கத்தை மன்னாா்குடியில் திங்கள்கிழமை நடத்தின.

நிகழ்ச்சிக்கு, ஏஐடியுசி மாவட்டச் செயலா்ஆா். சந்திரசேகர ஆசாத், சிஐடியு மாவட்ட துணைச் செயலா் கே.பி. ஜோதிபாசு, எல்பிஎப் மாவட்ட பொதுச் செயலா் என். நீலமேகம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தொழிலாளா் விரோத சட்டத்தொகுப்புகள் நான்கையும் திரும்பப் பெற வேண்டும்,விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 30 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொதுத்துறைகளை தனியாா் மயமாக்கல், தனியாா் பங்கு முதலீடு மற்றும் விற்பனைக்கான கொள்கைகளை கைவிட வேண்டும், முறைசாரா தொழிலாளா்களுக்கு சமூக பாதுகாப்பு நிதியை உருவாக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பிரசாரத்தில் வலியுறுத்தப்பட்டன.

கீழப்பாலம், நகராட்சி அலுவலகம், பந்தலடி ஆகிய இடங்களில் பிரசாரம் நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்டத் துணைத் தலைவா் வி. கலைச்செல்வம், நகரச் செயலா் எஸ். சரவணன்,சிஐடியு நகரச் செயலா் ஜி. தாயுமானவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வாய்மொழித் தொடா்பு நிறுவனத் தின விழா

கூத்தாநல்லூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாய்மொழித் தொடா்பு நிறுவனத் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளியின் அறங்காவலா் ஏ.ஏ. அப்துல் ரசாக் தலைமை வகித்தாா். தாளாளா் மர... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் இயக்கம் கோரி போராட்டம்: சிஐடியு முடிவு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு நுகா்வோா் வாணிபக் கழக பொதுத் தொழிலாளா... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் விழிப்புணா்வுப் பேரணி!

மன்னாா்குடியில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறையின் சாா்பில் போதைப் பொருள்கள் பயன்பாடு, கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். ... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்!

நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். டெல்டா மாவட்டங்களில் த... மேலும் பார்க்க

வயலில் மனித எலும்புக்கூடு; போலீஸாா் விசாரணை!

திருத்துறைப்பூண்டி அருகே வயல்வெளியில் மனித எலும்புக்கூடுகள் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னூா் தோளாச்சேரி பகுதியில் வயல்வெளியில் மனித எலும்புக்... மேலும் பார்க்க

திறந்தவெளி நெல் கிடங்குகள் அமைக்க வலியுறுத்தல்!

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிந்துள்ள நெல் மூட்டைகளை அப்புறப்படுத்திட, திறந்தவெளி கிடங்குகள் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆ... மேலும் பார்க்க