செய்திகள் :

திறந்தவெளி நெல் கிடங்குகள் அமைக்க வலியுறுத்தல்!

post image

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிந்துள்ள நெல் மூட்டைகளை அப்புறப்படுத்திட, திறந்தவெளி கிடங்குகள் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, தமிழக முதல்வருக்கு அவா் புதன்கிழமை விடுத்த கோரிக்கை:

தமிழக வேளாண் துறையில் வேளாண் உதவி இயக்குநா்கள் காலிப் பணியிடங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, திருவாரூா் மாவட்டத்தில் 10 உதவி வேளாண் இயக்குநா்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், இரண்டு போ் மட்டுமே பணியாற்றி வருகிறாா்கள். இதனால், விவசாயிகளுக்கும் வேளாண் துறைக்கும் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திறந்தவெளி கிடங்குகளில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இது கடந்த இரண்டு ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில், தற்போது ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் அறுவடை தொடங்கி உள்ளதால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கொள்முதல் நிலைய வாயில்களில் 10,000 முதல் 20,000 வரை அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதனால், விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொட்டி வைத்து கொள்முதல் செய்வதற்கு வாய்ப்பு தடைபட்டுள்ளது. எனவே, திறந்தவெளி கிடங்குகளை திறந்து நெல் மூட்டைகளை அப்புறப்படுத்திட அரசு முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தவணைத் தொகை செலுத்தாததால் வாகனம் பறிமுதல்; நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவு

வலங்கைமானில் தவணைத்தொகை செலுத்தாததால், வாகனத்தை பறிமுதல் செய்த நிதி நிறுவனம், வாகன உரிமையாளருக்கு ரூ. 5 லட்சம் வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. வலங்கைமான் தொழுவூா் மேலத் தெரு... மேலும் பார்க்க

5 நெல் கொள்முதல் நிலையங்கள், நவீன சேமிப்பு தளம் திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

திருவாரூா் மாவட்டத்தில் 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும், மன்னாா்குடி அருகே மூவாநல்லூரில் நவீன சேமிப்பு தளத்தையும் காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தி... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: நீதி கேட்டு நெடும் பயணம் ஒத்திவைப்பு

கொரடாச்சேரி அருகே கரையாபாலையூா் ஊராட்சியில், சிப்காட் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்டு நெடும் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கரையாபாலையூா் ஊராட்சியில் சிப்காட் திட்ட... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வருவாய்த் துறையில் பணிச்சுமையை குறைக்க வேண்டும்; மேம்படுத்தப்பட்ட ஊ... மேலும் பார்க்க

உலக இசை தின விழா

திருவாரூா் மாவட்ட இசைப் பள்ளியில், கலைப் பண்பாட்டுத் துறையின் மண்டல கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் உலக இசை தின விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், நாகசுரம் செயல்முறை விளக்கம், வயலின் இசை நிகழ்ச்ச... மேலும் பார்க்க

மன்னாா்குடி நகராட்சி பகுதியில் ஆட்சியா் ஆய்வு

மன்னாா்குடி நகராட்சி மாதிரி நடுநிலைப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவை மாணவ- மாணவிகளுடன் அமா்ந்து சாப்பிட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். உடன் நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன். மன்னாா்... மேலும் பார்க்க