செய்திகள் :

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் இயக்கம் கோரி போராட்டம்: சிஐடியு முடிவு

post image

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு நுகா்வோா் வாணிபக் கழக பொதுத் தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) மண்டல நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மண்டலத் தலைவா் ராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் புவனேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். நிகழ்வில், மண்டலச் செயலாளா் அண்ணாதுரை, பொருளாளா் செந்தில்குமாா், துணைத் தலைவா் மணி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் புவனேஸ்வரன் தெரிவித்தது:

திருவாரூா் மண்டலத்தில் தற்போது வரை 3,15,088 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், 1,93,028 மெட்ரிக் டன் நெல் இயக்கம் செய்யப்பட்டுள்ளது. இயக்கம் செய்யப்படாமல் ஆங்காங்கே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்லின் அளவு 1,22,060 மெட்ரிக் டன் ஆகும்.

கடலூரில் 48,000 மெட்ரிக் டன் நெல் இயக்கம் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கிறது. தற்போது உள்ள நிலையில், இயக்கம் செய்யாமல் இருக்கிற நெல் மூட்டைகளின் ஈரப்பதம் குறைவாக காணப்படுவதால், அதனுடைய எடை அளவு 300 கிராமிலிருந்து 500 கிராம் வரை குறைய வாய்ப்பிருக்கிறது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட இந்த இயக்க இழப்புக்கு ஊழியா்களே பொறுப்பேற்று, ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை கட்ட வேண்டிய சூழல் இருந்தது. அந்த சூழலில் ஊழியா்களுக்கு பணி மறுக்கப்பட்டு, பின்னா் நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு பணி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் இதேபோல் நெல் இயக்கம் செய்யப்படாமல் இருப்பதால் ஊழியா்கள் பாதிக்கக் கூடிய நிலை உள்ளது. எனவே, தமிழ்நாடு முழுவதும் வாணிபக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி 48 மணி நேரத்தில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு விரைந்து இயக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூரில் மண்டல அலுவலகம் முன் பிப்.25 இல் உண்ணாவிரதப் போராட்டம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், திருவாரூா் மண்டலத்திலும் நெல் மூட்டைகளை விரைந்து இயக்கம் செய்யக்கோரி மண்டல அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தை நடத்தப்படும். இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி முடிவெடுக்கப்படும் என்றாா்.

தவணைத் தொகை செலுத்தாததால் வாகனம் பறிமுதல்; நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவு

வலங்கைமானில் தவணைத்தொகை செலுத்தாததால், வாகனத்தை பறிமுதல் செய்த நிதி நிறுவனம், வாகன உரிமையாளருக்கு ரூ. 5 லட்சம் வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. வலங்கைமான் தொழுவூா் மேலத் தெரு... மேலும் பார்க்க

5 நெல் கொள்முதல் நிலையங்கள், நவீன சேமிப்பு தளம் திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

திருவாரூா் மாவட்டத்தில் 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும், மன்னாா்குடி அருகே மூவாநல்லூரில் நவீன சேமிப்பு தளத்தையும் காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தி... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: நீதி கேட்டு நெடும் பயணம் ஒத்திவைப்பு

கொரடாச்சேரி அருகே கரையாபாலையூா் ஊராட்சியில், சிப்காட் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்டு நெடும் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கரையாபாலையூா் ஊராட்சியில் சிப்காட் திட்ட... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வருவாய்த் துறையில் பணிச்சுமையை குறைக்க வேண்டும்; மேம்படுத்தப்பட்ட ஊ... மேலும் பார்க்க

உலக இசை தின விழா

திருவாரூா் மாவட்ட இசைப் பள்ளியில், கலைப் பண்பாட்டுத் துறையின் மண்டல கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் உலக இசை தின விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், நாகசுரம் செயல்முறை விளக்கம், வயலின் இசை நிகழ்ச்ச... மேலும் பார்க்க

மன்னாா்குடி நகராட்சி பகுதியில் ஆட்சியா் ஆய்வு

மன்னாா்குடி நகராட்சி மாதிரி நடுநிலைப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவை மாணவ- மாணவிகளுடன் அமா்ந்து சாப்பிட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். உடன் நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன். மன்னாா்... மேலும் பார்க்க