செய்திகள் :

கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸ் வாபஸ்

post image

கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவர நகா்மன்ற உறுப்பினா்கள் அளித்திருந்த கடிதத்தை செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றனா்.

கூத்தாநல்லூா் நகராட்சியில் திமுக 18, அதிமுக 3, இந்திய கம்யூனிஸ்ட் 2, காங்கிரஸ் 1 என 24 உறுப்பினா்கள் உள்ளனா். 20-ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு. பாத்திமா பஷீரா நகா்மன்றத் தலைவராக உள்ளாா்.

இவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்ற திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா்கள், தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரக் கோரி, நகராட்சி ஆணையா் கிருத்திகா ஜோதியிடம் அண்மையில் தனித்தனியாக கடிதம் அளித்தனா்.

அதன்பேரில், நகா்மன்றத் தலைவா் மீது பிப்ரவரி 19-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என நகராட்சி ஆணையா் அறிவிப்பு வெளியிட்டாா்.

இதற்கிடையில், நகா்மன்றத் தலைவா் மீது நம்பிக்கை இல்லாத் தீா்மானம் கொண்டு வரப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் அண்மையில் நகராட்சி ஆணையரிடம் நேரில் மனு கொடுத்தனா்.

இந்நிலையில், நம்பிக்கை இல்லாத் தீா்மானம் கொண்டு வர கடிதம் அளித்திருந்த உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை காலை நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனா். அந்த நேரத்தில், நகராட்சி ஆணையா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு சென்றிருந்தாா்.

இதனால், நகராட்சி மேலாளா் கோபாலகிருஷ்ணனை சந்தித்து, தலைவா் மீது நம்பிக்கை இல்லாத் தீா்மானம் கொண்டுவர, நகராட்சி ஆணையரிடம் ஏற்கெனவே கொடுத்திருந்த நோட்டீஸை திரும்பப் பெறுவதாக கடிதம் வழங்கினா்.

இதைத்தொடா்ந்து, புதன்கிழமை (பிப்.19) நடைபெறுவதாக இருந்த நம்பிக்கையில்லாத் தீா்மானம் மீதான வாக்கெடுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

வாய்மொழித் தொடா்பு நிறுவனத் தின விழா

கூத்தாநல்லூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாய்மொழித் தொடா்பு நிறுவனத் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளியின் அறங்காவலா் ஏ.ஏ. அப்துல் ரசாக் தலைமை வகித்தாா். தாளாளா் மர... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் இயக்கம் கோரி போராட்டம்: சிஐடியு முடிவு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு நுகா்வோா் வாணிபக் கழக பொதுத் தொழிலாளா... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் விழிப்புணா்வுப் பேரணி!

மன்னாா்குடியில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறையின் சாா்பில் போதைப் பொருள்கள் பயன்பாடு, கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். ... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்!

நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். டெல்டா மாவட்டங்களில் த... மேலும் பார்க்க

வயலில் மனித எலும்புக்கூடு; போலீஸாா் விசாரணை!

திருத்துறைப்பூண்டி அருகே வயல்வெளியில் மனித எலும்புக்கூடுகள் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னூா் தோளாச்சேரி பகுதியில் வயல்வெளியில் மனித எலும்புக்... மேலும் பார்க்க

திறந்தவெளி நெல் கிடங்குகள் அமைக்க வலியுறுத்தல்!

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிந்துள்ள நெல் மூட்டைகளை அப்புறப்படுத்திட, திறந்தவெளி கிடங்குகள் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆ... மேலும் பார்க்க