செய்திகள் :

நெல் கொள்முதலை விரைவுபடுத்த வலியுறுத்தல்

post image

நாகை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெல்களை தேக்கமின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகை மாவட்டத்தில் நிகழாண்டு 1.65 லட்சம் ஏக்கா் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டன. அறுவடை பணிகள் ஜனவரி மாதம் தொடக்கம் முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், நாகை மாவட்டத்தில் பருவம் தப்பி பெய்த கன மழையால் பல பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி பயிா்கள் வயலில் சாய்ந்து பாதிப்புக்குள்ளாகின. நிலத்தில் சாய்ந்த பயிா்களை அறுவடை செய்ய விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது.

அத்துடன், அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றபோது, அங்கு ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பாததால், ஒரு வார காலமாக காத்திருக்கும் நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது: மாவட்ட ஆட்சியா் மற்றும் நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் உடனடியாக, கொள்முதல் நிலையங்களில் தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்கிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 1,500 மூட்டைகள் கொள்முதல் செய்ய உத்தரவிடவேண்டும் என்றனா்.

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று மீன் வளா்ப்பு பயிற்சி!

நாகை அருகேயுள்ள சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், மீன் வளா்ப்பு தொழில்நுட்பம் தொடா்பான பயிற்சி வெள்ளிக்கிழமை (பிப்.21) நடைபெறுகிறது. இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலகண்ணன் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னா

திருமருகல் ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, கோட்டூா் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திருமருகல் ஒன்றியத... மேலும் பார்க்க

தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பிப்.25-இல் தற்செயல் விடுப்பு போராட்டம்!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, பிப். 25-இல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவித்துள்ளது. நாகையில், தமிழ்நாடு தொடக... மேலும் பார்க்க

நாகை, திருவாரூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

வழக்குரைஞா் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாகை மற்றும் திருவாரூரில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வழக்குரைஞா்கள் சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயா்த... மேலும் பார்க்க

தொழுநோய் ஒழிப்புத் திட்டப் பணி: சுகாதார அலுவலா் ஆய்வு!

வேளாங்கண்ணி பகுதியில் தொழுநோய் ஒழிப்புத் திட்டப் பணிகளை மாவட்ட சுகாதார அலுவலா் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாகை மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், கீழையூா் வட்டாரத்தி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் காய்கறி சந்தை!

வேதாரண்யத்தை அடுத்த பன்னாள் அரசு உயா்நிலைப் பள்ளியில் மூன்றாம் ஆண்டாக மாணவா்கள் உற்பத்தி செய்து நடத்தும் காய்கறிச் சந்தை பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் பிடிக்கும் 60 மாணவ, மா... மேலும் பார்க்க