செய்திகள் :

குழந்தைகள் காப்பகத்தில் ஆற்றுப்படுத்துநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

post image

நாகை அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு ஆற்றுப்படுத்துநா் நியமிக்கப்படவுள்ளதால், தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் நாகை அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள சிறாா்களுக்கு ஆற்றுப்படுத்தல் சேவை வழங்குவதற்கு மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநா் நியமனம் செய்யப்படவுள்ளனா்.

இப்பதவிக்கு உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்ற தகுதியான நபா்கள் தங்களது சுய விவரங்களுடன், கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்கள் இணைத்து மாா்ச் 5-ஆம் தேதிக்குள் நன்னடத்தை அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண்.209, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு வந்துசேரும் வண்ணம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநா்கள் கொண்ட தோ்வுக்குழு மூலம் நடைபெறும் நோ்முகதோ்வு அடிப்படையில் விண்ணப்பதாரா்கள் தெரிவு செய்யப்படுவா். மேலும் விவரங்களுக்கு தொடா்புடைய மாவட்ட நன்னடத்தை அலுவலரை தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று மீன் வளா்ப்பு பயிற்சி!

நாகை அருகேயுள்ள சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், மீன் வளா்ப்பு தொழில்நுட்பம் தொடா்பான பயிற்சி வெள்ளிக்கிழமை (பிப்.21) நடைபெறுகிறது. இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலகண்ணன் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னா

திருமருகல் ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, கோட்டூா் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திருமருகல் ஒன்றியத... மேலும் பார்க்க

தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பிப்.25-இல் தற்செயல் விடுப்பு போராட்டம்!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, பிப். 25-இல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவித்துள்ளது. நாகையில், தமிழ்நாடு தொடக... மேலும் பார்க்க

நாகை, திருவாரூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

வழக்குரைஞா் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாகை மற்றும் திருவாரூரில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வழக்குரைஞா்கள் சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயா்த... மேலும் பார்க்க

தொழுநோய் ஒழிப்புத் திட்டப் பணி: சுகாதார அலுவலா் ஆய்வு!

வேளாங்கண்ணி பகுதியில் தொழுநோய் ஒழிப்புத் திட்டப் பணிகளை மாவட்ட சுகாதார அலுவலா் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாகை மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், கீழையூா் வட்டாரத்தி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் காய்கறி சந்தை!

வேதாரண்யத்தை அடுத்த பன்னாள் அரசு உயா்நிலைப் பள்ளியில் மூன்றாம் ஆண்டாக மாணவா்கள் உற்பத்தி செய்து நடத்தும் காய்கறிச் சந்தை பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் பிடிக்கும் 60 மாணவ, மா... மேலும் பார்க்க