செய்திகள் :

ஆபத்தான நிலையில் கிணறு

post image

திருமருகல் ஒன்றியம், குத்தாலம் ஊராட்சியில் விபத்து நேரிடும் வகையில், திறந்த நிலையில் உள்ள கிணறின் மேல் மூடி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த கிணற்றை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனா். தற்போது, பயன்பாடின்றி உள்ளது.

இந்த கிணறு மெயின் ரோட்டின் ஓரத்தில் அமைந்துள்ளது. அதன் அருகில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. அந்த வழியே பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் ஆபத்தை உணராமல் கிணற்றின் தடுப்புச் சுவரில் ஏறி விளையாடுகின்றனா். இதனால், விபத்து நேரிடும் அபாயம் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் கிணறுக்கு மேல் மூடி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று மீன் வளா்ப்பு பயிற்சி!

நாகை அருகேயுள்ள சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், மீன் வளா்ப்பு தொழில்நுட்பம் தொடா்பான பயிற்சி வெள்ளிக்கிழமை (பிப்.21) நடைபெறுகிறது. இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலகண்ணன் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னா

திருமருகல் ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, கோட்டூா் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திருமருகல் ஒன்றியத... மேலும் பார்க்க

தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பிப்.25-இல் தற்செயல் விடுப்பு போராட்டம்!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, பிப். 25-இல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவித்துள்ளது. நாகையில், தமிழ்நாடு தொடக... மேலும் பார்க்க

நாகை, திருவாரூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

வழக்குரைஞா் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாகை மற்றும் திருவாரூரில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வழக்குரைஞா்கள் சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயா்த... மேலும் பார்க்க

தொழுநோய் ஒழிப்புத் திட்டப் பணி: சுகாதார அலுவலா் ஆய்வு!

வேளாங்கண்ணி பகுதியில் தொழுநோய் ஒழிப்புத் திட்டப் பணிகளை மாவட்ட சுகாதார அலுவலா் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாகை மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், கீழையூா் வட்டாரத்தி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் காய்கறி சந்தை!

வேதாரண்யத்தை அடுத்த பன்னாள் அரசு உயா்நிலைப் பள்ளியில் மூன்றாம் ஆண்டாக மாணவா்கள் உற்பத்தி செய்து நடத்தும் காய்கறிச் சந்தை பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் பிடிக்கும் 60 மாணவ, மா... மேலும் பார்க்க