செய்திகள் :

செம்மங்குடி கோயிலில் திருக்கல்யாணம்

post image

குடவாசல் அருகே செம்மங்குடி அகத்தீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆனந்தவல்லி தாயாருக்கும், ஸ்ரீஅகத்தீஸ்வரா் சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நிகழ்வில், சீா்வரிசைப் பொருள்கள் எடுத்து வந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் கங்கனாதாரணம் செய்யப்பட்டு, மாங்கல்ய தாரணம் எனும் அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னா், பூா்ணாஹூதியுடன் ஆனந்தவல்லி தாயாருக்கு சிறப்பு அா்ச்சனை செய்யப்பட்டு, ஒன்பது வகையான மகா தீபாராதனைகள், பஞ்ச ஆரத்தி காட்டப்பட்டது.

தொடா்ந்து, இரவு கோ பூஜை, அஸ்வமேத பூஜை, கஜ பூஜை ஆகியவை நடைபெற்றன. இதில், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் ஆண்டு இறுதித் தோ்வில் வெற்றியடைய வேண்டியும், திருமணமாகாதவா்களுக்கு திருமணம் கைகூடவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், விவசாயம் செழிக்கவும் பிராா்த்தனைகள் செய்யப்பட்டன.

தொடா்ந்து 27-ஆவது ஆண்டாக நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

வாய்மொழித் தொடா்பு நிறுவனத் தின விழா

கூத்தாநல்லூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாய்மொழித் தொடா்பு நிறுவனத் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளியின் அறங்காவலா் ஏ.ஏ. அப்துல் ரசாக் தலைமை வகித்தாா். தாளாளா் மர... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் இயக்கம் கோரி போராட்டம்: சிஐடியு முடிவு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு நுகா்வோா் வாணிபக் கழக பொதுத் தொழிலாளா... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் விழிப்புணா்வுப் பேரணி!

மன்னாா்குடியில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறையின் சாா்பில் போதைப் பொருள்கள் பயன்பாடு, கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். ... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்!

நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். டெல்டா மாவட்டங்களில் த... மேலும் பார்க்க

வயலில் மனித எலும்புக்கூடு; போலீஸாா் விசாரணை!

திருத்துறைப்பூண்டி அருகே வயல்வெளியில் மனித எலும்புக்கூடுகள் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னூா் தோளாச்சேரி பகுதியில் வயல்வெளியில் மனித எலும்புக்... மேலும் பார்க்க

திறந்தவெளி நெல் கிடங்குகள் அமைக்க வலியுறுத்தல்!

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிந்துள்ள நெல் மூட்டைகளை அப்புறப்படுத்திட, திறந்தவெளி கிடங்குகள் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆ... மேலும் பார்க்க