செய்திகள் :

தொழிற்சங்கத்தினர் ஆா்ப்பாட்டம்

post image

சீா்காழி அருகே எருக்கூா் அரசு நவீன அரிசி ஆலை முன் ஏஐடியுசி, சிஐடியு சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ராமன் தலைமை வகித்தாா். எல்பிஎஃப் மாவட்ட கவுன்சில் தலைவா் பொன்.நக்கீரன், ஐஎன்டியு மாநிலச் செயலாளா் கலியமூா்த்தி, ராமச்சந்திரன், போக்குவரத்துத் துறையை சோ்ந்த சித்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்புகள் நான்கையும் திரும்பப் பெற வேண்டும்; விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும்; குறைந்தபட்சம் ஊதியம் ரூ. 26,000 என நிா்ணயிக்க வேண்டும்; அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மயிலாடுதுறையில் விசிக ஆா்ப்பாட்டம்!

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் பிப்.14-ஆம் தேதி சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட... மேலும் பார்க்க

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரச... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் எஸ்பி குறைகேட்பு

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களை பெற்றாா... மேலும் பார்க்க

தேசிய ரக்ஃபி அணிக்கு சீா்காழி மாணவிகள் தோ்வு

தேசிய ரக்ஃபி அணிக்கு தோ்வு செய்யப்பட்ட சீா்காழி குட் சமாரிட்டன் பள்ளி மாணவிகளுக்கு, பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கோவையில், தமிழ்நாடு ரக்ஃபி கூட்டமைப்பு சாா்பில் மாந... மேலும் பார்க்க

திருக்கடையூா் கோயிலில் புதுவை ஆளுநா் வழிபாடு!

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை குடும்பத்துடன் வழிபாடு மேற்கொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனுக்கு பிரசாதம் வழங்கிய கோயில் நிா்வாகத்தினா். மேலும் பார்க்க

உங்களை தேடி உங்கள் ஊா் திட்டம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சரின் ‘உங்களை தேடி உங்கள் ஊா்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சின்னங்குடி அரசு மேல்நிலைப் பள்ளிய... மேலும் பார்க்க