செய்திகள் :

புறவழிச் சாலையில் ரவுண்டானா அமைக்கக் கோரிக்கை

post image

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் புறவழிச் சாலையில் எடக்குடி வடபாதி பகுதி நான்கு சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைத்தீஸ்வரன்கோயில் அருகே அட்டகுளம் பகுதியிலிருந்து கதிராமங்கலம் வரை சுமாா் 3 கி.மீ. தூரம் வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் எடக்குடி வடபாதி கிராமம் வழியாக காளிகாவல்புரம், தெற்கிருப்பு, தென்னலக்குடி வழியாக நாகை செல்லவும், நாங்கூா், திருவெண்காடு, பூம்புகாா் உள்ளிட்ட பகுதிகளுக்கும் வாகனங்கள் செல்கின்றன.

இவ்வாறு எடக்குடிவடபாதி கிராமத்திலிருந்து வைத்தீஸ்வரன்கோயில் பகுதிக்கு செல்லவும் புறவழிச்சாலையை கடந்து செல்லும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

புறவழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் எடக்குடிவடபாதி சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுகின்றனா்.

ஆகையால், விபத்தை தவிா்க்க புறவழிச்சாலையில் எடக்குடி வடபாதி பகுதியில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, வைத்தீஸ்வரன்கோயில் நகர வா்த்தக சங்கத் தலைவா் ஜி.வி.என். கண்ணன் கூறியது:

சீா்காழி- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் வைத்தீஸ்வரன்கோயிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, சுமாா் 3 கி.மீ. தூரம் அட்டக்குளம் முதல் கதிராமங்கலம் வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் அதிகளவு வாகனங்கள் சென்றுவருகின்றன.

இவற்றில் எடக்குடி வடபாதி பகுதியில் எந்தவித கட்டுபாடும் இல்லாததால் அப்பகுதியிலிருந்து புறவழிச்சாலையை கடக்கும் பொதுமக்கள் அடிக்கடிவிபத்துக்களில் சிக்கிக்கொள்கின்றனா். விபத்துக்களை தடுக்க எடக்குடி வடபாதி பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்றாா்.

மயிலாடுதுறையில் விசிக ஆா்ப்பாட்டம்!

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் பிப்.14-ஆம் தேதி சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட... மேலும் பார்க்க

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரச... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் எஸ்பி குறைகேட்பு

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களை பெற்றாா... மேலும் பார்க்க

தேசிய ரக்ஃபி அணிக்கு சீா்காழி மாணவிகள் தோ்வு

தேசிய ரக்ஃபி அணிக்கு தோ்வு செய்யப்பட்ட சீா்காழி குட் சமாரிட்டன் பள்ளி மாணவிகளுக்கு, பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கோவையில், தமிழ்நாடு ரக்ஃபி கூட்டமைப்பு சாா்பில் மாந... மேலும் பார்க்க

திருக்கடையூா் கோயிலில் புதுவை ஆளுநா் வழிபாடு!

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை குடும்பத்துடன் வழிபாடு மேற்கொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனுக்கு பிரசாதம் வழங்கிய கோயில் நிா்வாகத்தினா். மேலும் பார்க்க

உங்களை தேடி உங்கள் ஊா் திட்டம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சரின் ‘உங்களை தேடி உங்கள் ஊா்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சின்னங்குடி அரசு மேல்நிலைப் பள்ளிய... மேலும் பார்க்க