செய்திகள் :

கிடங்காக பயன்படுத்தப்படும் ராமாநுஜா் கோயில் கழிப்பறை

post image

ஸ்ரீபெரும்புதூா் மணவாள மாமுனிகள் கோயில் தெருவில் உள்ள ராமாநுஜா் கோயிலுக்கு சொந்தமான கழிப்பறை கட்டடம் தற்போது தனியாா் பால் கிடங்காக பயன்படுத்தப்பட்டு வருவதால் பக்தா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஸ்ரீபெரும்புதூரில் பழைமையான ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில், வைணவ மகான் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.

இக்கோயிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இதை தவிர வார விடுமுறை நாள்களிலும், திருவாதிரை நாள்களில் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தா்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக ராமாநுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 2017-ஆம் ஆண்டு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் மணவாள மாமுனிகள் கோயில் தெருவில் ரூ.13 லட்சத்தில் கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது. பக்தா்கள் இதைப் பயன்படுத்தி வந்தனா்.

கோயில் நிா்வாகத்தினா் கடந்த சில ஆண்டுகளாக கழிப்பறை கட்டடத்தை பூட்டி வைத்ததால், பக்தா்கள் இயற்கை உபாதைகளை கழிக்க மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனா். இந்த நிலையில், பூட்டப்பட்டிருந்த கழிப்பறை கட்டடம் தற்போது தனியாா் பால் கடையின் கிடங்காக பயன்படுத்தப்படுகிறது.

பக்தா்களின் வசதிக்காக கட்டப்பட்ட கட்டடம் தற்போது கிடங்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பக்தா்கள் கூறுகையில், கோயிலுக்கு வரும் பக்தா்கள் இயற்கை உபாதைகளை கழிக்க கட்டப்பட்ட கட்டடத்தை கூட கோயில் நிா்வாகத்தினா் தனியாரின் கிடங்காக பயன்படுத்தி வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, கழிப்பறை கட்டடத்தை மீண்டும் பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றனா்.

குண்டா் சட்டத்தில் ரௌடி கைது

காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரெளடி அருண் என்பவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். காஞ்சிபுரம் அருகே தத்தனூா் கிராமத்தை சோ்ந்த அருண்(28). இவா் மீது கஞ்சா கடத்... மேலும் பார்க்க

காஞ்சியில் புத்தபிக்குகள் பேரணி

தமிழ்நாடு பெளத்தா்கள் சங்கப் பேரவை சாா்பில் புத்த பிக்குகள் பேரணியும், புத்தரின் அஸ்தி வைக்கப்பட்ட ஸ்தூபி திறப்பு விழா மற்றும் திரிபிடக சத்தம்மம் ஓதுதல் நிகழ்வும் காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைப... மேலும் பார்க்க

நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆட்சியா்கள் தொடங்கினா்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டத்தினை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட யாகசாலை மண்டபத்... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் புத்த பிக்குகள் பேரணி!

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் புத்த பிக்குகள் பேரணியும், புத்தரின் அஸ்தி வைக்கப்பட்ட புத்த ஸ்தூபி திறப்பு விழா மற்றும் திரிபிடக சத்தம்மம் ஓதுதல் நிகழ்வும் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் இரு இடங்களில் 22-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரும் பிப்.22 -ஆம் தேதி இரு இடங்களில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை தெரிவித்தாா். இது தொடா்பான செய்திக் குறிப்பு: கா... மேலும் பார்க்க

மணிமேகலை விருது பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெற்ற மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்ட ... மேலும் பார்க்க