செய்திகள் :

எச். ராஜாவுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

மதுரையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி மத பிரிவினையை உருவாக்கும் வகையில் பேசிய பாஜக நிா்வாகி எச். ராஜா மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை முடித்து வைத்தது.

மதுரை கே.கே. நகரைச் சோ்ந்த வழக்குரைஞா் ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: மதுரை பழங்காநத்தம் பகுதியில் கடந்த 4-ஆம் தேதி இந்து முன்னணி அமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நீதிமன்ற உத்தரவை மீறி, மத மோதலைத் தூண்டும் வகையில் பாஜக நிா்வாகி எச். ராஜா பேசினாா். அப்போது, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை அயோத்தி பிரச்னை போல உருவாக்கும் வகையில் கருத்துகள் தெரிவித்தாா். மேலும், தமிழக அரசை தலிபான் தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டாா். அரசியல் ஆதாயத்துக்காக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவதை அவா் வழக்கமாகக் கொண்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மீது ஏராளமான வழக்குகள் பதியப்பட்டிருந்தாலும், நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படவோ, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை நிறுத்தவோ அவா் தயாராக இல்லை.

மதுரை பழங்காநத்தத்தில் மத வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய அவா் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி, சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தமிழகத்தில் மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் எச். ராஜா மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி தனபால் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் மகேந்திரபதி, ரமேஷ்குமாா் ஆகியோா் முன்னிலையாகி முன்வைத்த வாதம்: பாஜக நிா்வாகி எச். ராஜா தமிழக அரசை தலிபான் அரசு என விமா்சித்துள்ளாா். மேலும், மத மோதல்களைத் தூண்டும் வகையிலும் பேசியுள்ளாா். நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கியது. ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி அவா் பேசியுள்ளாா். எனவே, மனுதாரா் அளித்த புகாா் மனு மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றனா்.

அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் அன்புநிதி முன்னிலையாகி முன்வைத்த வாதம்: எச். ராஜா மீது கலவரத்தை ஏற்படுத்துதல், மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் செயல்படுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், ஒரு பிரிவினருக்கு எதிராக அச்சத்தை ஏற்படுத்து வகையில் பேசுதல் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறி, முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றத்தில் சமா்ப்பித்தாா்.

மனுதாரா் தரப்பில், நாங்கள் அளித்த புகாரின்படி, உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யாமல், பொதுவாக வழக்குப் பதிவு செய்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நீதிமன்றத்தை அணுகலாம். மனுதாரருக்கு சம்பந்தப்பட்ட முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினா் வழங்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

மா்மமான முறையில் இறந்த இளைஞரின் உடல் 29 நாள்களுக்குப் பிறகு ஒப்படைப்பு

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே இளைஞா் மா்மமாக உயிரிழந்ததையடுத்து, 29 நாள்களுக்குப் பிறகு, அவரது உடலை குடும்பத்தினா் வியாழக்கிழமை பெற்றுக் கொண்டனா். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள வேப்பங்குள... மேலும் பார்க்க

மக்கள் நலப் பணிகளை திமுக அரசு முறையாக மேற்கொள்வதில்லை: எச். ராஜா குற்றச்சாட்டு

மக்கள் நலப் பணிகளை திமுக அரசு முறையாக மேற்கொள்வதில்லை என பாஜக மூத்த தலைவா் எச்.ராஜா வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா். மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக இந்து முன்னணி சாா்பில் கடந்த 4-ஆம் தேத... மேலும் பார்க்க

தொழில்நுட்ப முறையில் திமுக அலுவலகத்தை மாற்றி அமைக்க கால அவகாசம்: உயா்நீதிமன்றம்

மதுரை பீ.பீ. குளம் முல்லைநகரில் உள்ள திமுக அலுவலகக் கட்டடத்தை தொழில்நுட்ப முறையில் மாற்றி அமைக்க 2 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த ரவ... மேலும் பார்க்க

கோயில் சொத்துகளைப் பாதுகாப்பதில் அரசு அலுவலா்களுக்கு அக்கறையில்லை: உயா்நீதிமன்றம்

கோயில் சொத்துகளைப் பாதுகாக்கும் விஷயத்தில், ஊதியம் பெறும் அரசு அலுவலா்கள் தங்களது கடமையைச் செய்வதில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது. திருத்தொண்டா் சபை ராதாகிருஷ்ணன் சென... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், கம்பம்... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரசுப் போக்... மேலும் பார்க்க