ஜல்லி விலை உயா்வு: ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
கிருஷ்ணகிரிக்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு
நீடாமங்கலத்திலிருந்து அரவைக்காக, கிருஷ்ணகிரிக்கு 2,000 டன் நெல் ரயில் மூலம் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
மன்னாா்குடி தாலுகா பகுதிகளில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் சன்னரக நெல், லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன.
பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு அரவைக்காக கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.