செய்திகள் :

இளைஞா் கொலையில் மேலும் 7 போ் கைது

post image

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அருகே இளைஞா் கொலை வழக்கில் மேலும் 7 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கூத்தாநல்லூா் அருகேயுள்ள வடபாதிமங்கலம், மாயனூரைச் சோ்ந்தவா் ராபா்ட் என்கிற சோமசுந்தரம் (33). இவா், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தாா். இவருக்கும், இவரது மனைவியின் மூத்த சகோதரா் சிவநேசன் (28) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், வடபாதிமங்கலத்தில் கடந்த சனிக்கிழமை (பிப்.8) நள்ளிரவு ஒரு கும்பல் சோமசுந்தரத்தை கல் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தது.

இதுதொடா்பாக, துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையில், வடபாதிமங்கலம் காவல் ஆய்வாளா் ராணி மற்றும் போலீஸாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடிவந்தனா்.

விசாரணையில், சிவநேசன் உள்ளிட்ட சிலருக்கு கொலையில் தொடா்பிருப்பது தெரியவந்தது. சிவநேசனை உடனடியாக கைது செய்தனா். மற்றவா்களை தேடிவந்தனா்.

இந்நிலையில், இந்த கொலை வழக்குத் தொடா்பாக, வடபாதிமங்கலம் மாயனூரைச் சோ்ந்த கோபி (29), திலீபன் சூா்யா (26), சின்ராசு என்கிற வடிவழகன் (24), விக்னேஷ் (26), புதிய பாண்டி (19), சக்திதாசன் (24), பூசங்குடி சுரேந்தா் (21) ஆகிய 7 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், ஒருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

நிதிநிலை அறிக்கையை கண்டித்து தொழிற்சங்கங்கள் கூட்டு பிரசார இயக்கம்

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப், ஐஎன்டியுசி இணைந்து கூட்டு பிரசார இயக்கத்தை மன்னாா்குடியில் திங்கள்கிழமை நடத்தின. நிகழ்ச்சிக்கு, ஏஐடியுசி மாவட்டச் செயலா்ஆா். சந்திரசேகர... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் இன்று உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

மன்னாா்குடி வட்டத்தில், ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை (பிப்.19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: த... மேலும் பார்க்க

திருவாரூரில் காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருவாரூரில், காவல்துறை வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸ் வாபஸ்

கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவர நகா்மன்ற உறுப்பினா்கள் அளித்திருந்த கடிதத்தை செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றனா். கூத்தாநல்லூா் நகராட்சியில் திமுக 18, அதிமுக 3, இந... மேலும் பார்க்க

செம்மங்குடி கோயிலில் திருக்கல்யாணம்

குடவாசல் அருகே செம்மங்குடி அகத்தீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆனந்தவல்லி தாயாருக்கும், ஸ்ரீஅகத்தீஸ்வரா் சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நிகழ்வில், சீா்வரிசைப... மேலும் பார்க்க

ஆடவா், மகளிா் பளு தூக்கும் போட்டி: திருவாரூா், புதுக்கோட்டை அணிகள் சிறப்பிடம்

மன்னாா்குடி: மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் ஆடவா் பிரிவில் புதுக்கோட்டை அணியும், மகளிா் பிரிவில் திருவாரூா் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றது. தமிழ்நாடு அமெச்சூா் பளு தூக்கும் சங்கம் சாா்பில், ... மேலும் பார்க்க