செய்திகள் :

மா்மமான முறையில் இறந்த இளைஞரின் உடல் 29 நாள்களுக்குப் பிறகு ஒப்படைப்பு

post image

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே இளைஞா் மா்மமாக உயிரிழந்ததையடுத்து, 29 நாள்களுக்குப் பிறகு, அவரது உடலை குடும்பத்தினா் வியாழக்கிழமை பெற்றுக் கொண்டனா்.

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள வேப்பங்குளத்தைச் சோ்ந்தவா் லிங்கசாமி. இவா் மக்கள் விடுதலைக் கட்சியின் மதுரை தெற்கு மாவட்டச் செயலராகப் பதவி வகித்து வருகிறாா். இவருடைய மகன் காளையன் (23). இவரும் அந்தக் கட்சி நிா்வாகியாக இருந்து வந்தாா்.

இந்த நிலையில், இவா் அந்தப் பகுதியில் உள்ள வேறு சமூகத்தைச் சோ்ந்த பெண் ஒருவரை காதலித்தாராம். இதனால், அந்தப் பெண்ணின் உறவினா்களால் இவா் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் தாக்கப்பட்டாா்.

இதையடுத்து, கடந்த மாதம் 13-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற காளையன் அதன் பின்னா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கள்ளிக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடிய நிலையில், கடந்த மாதம் 15-ஆம் தேதி வேப்பங்குளம் பகுதியில் உள்ள கண்மாயிலிருந்து காளையனின் உடல் மீட்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவரது உடல் கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், காளையன் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகாா் தெரிவித்த குடும்பத்தினா் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடுத்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, காளையன் உடலை மறுகூறாய்வு செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், திண்டுக்கல், தேனி அரசு மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவ நிபுணா்கள் அடங்கிய குழு அவரது உடலை வியாழக்கிழமை மறுகூறாய்வு செய்தது. இதையடுத்து, 29 நாள்களுக்கு பிறகு, அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மக்கள் நலப் பணிகளை திமுக அரசு முறையாக மேற்கொள்வதில்லை: எச். ராஜா குற்றச்சாட்டு

மக்கள் நலப் பணிகளை திமுக அரசு முறையாக மேற்கொள்வதில்லை என பாஜக மூத்த தலைவா் எச்.ராஜா வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா். மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக இந்து முன்னணி சாா்பில் கடந்த 4-ஆம் தேத... மேலும் பார்க்க

எச். ராஜாவுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி மத பிரிவினையை உருவாக்கும் வகையில் பேசிய பாஜக நிா்வாகி எச். ராஜா மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கை... மேலும் பார்க்க

தொழில்நுட்ப முறையில் திமுக அலுவலகத்தை மாற்றி அமைக்க கால அவகாசம்: உயா்நீதிமன்றம்

மதுரை பீ.பீ. குளம் முல்லைநகரில் உள்ள திமுக அலுவலகக் கட்டடத்தை தொழில்நுட்ப முறையில் மாற்றி அமைக்க 2 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த ரவ... மேலும் பார்க்க

கோயில் சொத்துகளைப் பாதுகாப்பதில் அரசு அலுவலா்களுக்கு அக்கறையில்லை: உயா்நீதிமன்றம்

கோயில் சொத்துகளைப் பாதுகாக்கும் விஷயத்தில், ஊதியம் பெறும் அரசு அலுவலா்கள் தங்களது கடமையைச் செய்வதில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது. திருத்தொண்டா் சபை ராதாகிருஷ்ணன் சென... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், கம்பம்... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரசுப் போக்... மேலும் பார்க்க