செய்திகள் :

இந்திய கம்யூ. ஒன்றியக் குழுக் கூட்டம்

post image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், வலங்கைமான் ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடியில் நடைபெற்ற கூட்டத்திற்கு, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்ட துணைச் செயலாளா் வி. பாக்யராஜ் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் த. ரங்கராஜன், ஒன்றியச் செயலாளா் எஸ். எம். செந்தில்குமாா் ஆகியோா் கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினா்.

தொடா்ந்து, நல்லூா், ஊத்துக்காடு, கோவிந்தகுடி மற்றும் வலங்கைமான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பின்புறம் இயங்கும் மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தியும், பாப்பாகுடி ஊராட்சி கருப்பட்டிபள்ளம் கிராமத்தில், இடிந்த மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை சீரமைக்காததைக் கண்டித்தும், களத்தூா் ஊராட்சிக்கு குடிநீா் விநியோகம் செய்ய மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டித்தர தர வலியுறுத்தியும், மாா்ச் 5-ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, வலங்கைமானில் பிப்.28-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நிறைவாக, விவசாய சங்க ஒன்றியத் தலைவா் எம். கலியபெருமாள் நன்றி கூறினாா்.

நிதிநிலை அறிக்கையை கண்டித்து தொழிற்சங்கங்கள் கூட்டு பிரசார இயக்கம்

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப், ஐஎன்டியுசி இணைந்து கூட்டு பிரசார இயக்கத்தை மன்னாா்குடியில் திங்கள்கிழமை நடத்தின. நிகழ்ச்சிக்கு, ஏஐடியுசி மாவட்டச் செயலா்ஆா். சந்திரசேகர... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் இன்று உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

மன்னாா்குடி வட்டத்தில், ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை (பிப்.19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: த... மேலும் பார்க்க

திருவாரூரில் காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருவாரூரில், காவல்துறை வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸ் வாபஸ்

கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவர நகா்மன்ற உறுப்பினா்கள் அளித்திருந்த கடிதத்தை செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றனா். கூத்தாநல்லூா் நகராட்சியில் திமுக 18, அதிமுக 3, இந... மேலும் பார்க்க

செம்மங்குடி கோயிலில் திருக்கல்யாணம்

குடவாசல் அருகே செம்மங்குடி அகத்தீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆனந்தவல்லி தாயாருக்கும், ஸ்ரீஅகத்தீஸ்வரா் சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நிகழ்வில், சீா்வரிசைப... மேலும் பார்க்க

ஆடவா், மகளிா் பளு தூக்கும் போட்டி: திருவாரூா், புதுக்கோட்டை அணிகள் சிறப்பிடம்

மன்னாா்குடி: மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் ஆடவா் பிரிவில் புதுக்கோட்டை அணியும், மகளிா் பிரிவில் திருவாரூா் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றது. தமிழ்நாடு அமெச்சூா் பளு தூக்கும் சங்கம் சாா்பில், ... மேலும் பார்க்க